வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் வெளியீடு

வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: வடசென்னை குடி​யிருப்​போர் நலச் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் பெரம்​பூர் தொகுதி மக்​களின் அன்​றாட அடிப்​படை பிரச்​சினை​கள் மற்​றும் நீண்​ட​கால வளர்ச்சி தேவை​களுக்கு தீர்வு காணும் நோக்​கத்​துடன் தொகுதி வளம், வளர்ச்​சிக்​கான மக்​கள் கூடு​கை, பெரம்​பூர் கண்​ண​தாசன் நகரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பெரம்​பூர் தொகுதி மக்​கள் வளர்ச்​சிக்​காக தயார் செய்​யப்​பட்ட மாஸ்​டர் பிளான் அறிக்​கையை கூட்​டமைப்​பின் தலை​வர் டி.கே.சண்​முகம் வெளி​யிட்​டார். தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யத் தலை​வர் வி.சிவா பெற்​றுக்​கொண்​டார்.

இந்த அறிக்​கை​யில், கொடுங்​கையூர் எரிஉலை திட்​டத்தை அரசு கைவிட்​டு, பசுமை சென்​னைக்​கான முன்​னெடுப்பு திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

மீட்​கப்​படும் 352 ஏக்​கர் நிலத்தை வடசென்​னை​யின் நூல​கம், பூங்கா வசதி​களு​டன் புதிய வளர்ச்சி மைய​மாக மாற்ற வேண்​டும்.

வண்​ணாரப்​பேட்டை முதல் செங்​குன்​றம் வரை புதிய மெட்ரோ வழித்​தடத்​துக்​கான சாத்​தி​யக்​கூறு ஆய்வை உடனடி​யாக தொடங்க வேண்​டும். பேசின் பிரிட்ஜ் போக்​கு​வரத்து நெரிசலை சமாளிக்க புதிய உயர்​மட்ட சாலை அமைக்க வேண்​டும்.

மூலக்​கடை - பெரம்​பூர் இடையே மாதவரம் நெடுஞ்​சாலை அகலப்​படுத்த வேண்​டும். குடிநீர், பாதாள சாக்​கடை பிரச்​சினை​களுக்​காக முழு​மை​யாக ஆய்வு செய்​து, நவீன முறை​யில் மறுகட்​டமைக்க வேண்​டும். மழைநீர் கால்​வாய்​களை போர்க்​கால அடிப்​படை​யில் தூர்​வார வேண்​டும்.

ஒருங்​கிணைந்த பெரம்​பூர் வெள்ள பாது​காப்பு திட்​டத்தை உரு​வாக்க வேண்​டும். விடு​பட்ட தகு​தி​யான குடி​யிருப்​பு​களுக்கு குடிமனை பட்​டாக்​களை வழங்க வேண்​டும் என்பட உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​கள் இடம்​பெற்​றிருந்​தன.

முன்​ன​தாக, கூட்​டமைப்​பின் தலை​வர் டி.கே.சண்​முகம் பேசும்​போது, “கால்​பந்து வீரர்​களின் விளை​யாட்டு களமாக இருந்​த​தால் வியாசர்​பாடி பகுதி குட்டி பிரேசில் என்று அழைக்​கப்​பட்​டது. இன்று க்ரைம் ஏரியா என்று முத்​திரை குத்​தப்​படு​கிறது.

கல்​வி, அறி​வியல், தொழிலில் சிறப்​பான முத்​திரையை பெரம்​பூர் தொகுதி பதிக்க வேண்​டும். பெரம்​பூர் தொகு​தி​யின் முகத்​தோற்​றம் மாற வேண்​டும். அதற்கு இந்த மாஸ்​டர் பிளானை அரசு அமல்​படுத்த வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார்.

வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் வெளியீடு
அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த உன்னத தமிழகம் உருவாக்குவோம்: முதல்வர் விஜய் காவலர் தின வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in