“திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது” - கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டும் மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் | கோப்புப்படம்
மாணிக்கம் தாகூர் | கோப்புப்படம்
Updated on
1 min read

“​தி​முக தனி​யாக ஆட்சி அமைக்க முடி​யாது என்ற திசையை​யும் லயோலா கல்​லூரி கருத்​துக்​கணிப்பு காட்​டி​யுள்​ளது.” என காங்​கிரஸ் எம்​பி-​யான மாணிக்​கம் தாகூர் மீண்​டும் உறு​திபடுத்தி இருக்​கி​றார்.

இது தொடர்​பாக நேற்று விருதுநகரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவின் 2 நாள் பயணம் என்​பது அதி​முக-வை மிரட்​டும் பயண​மாகத்​தான் அமைந்து உள்​ளது. அதி​முக-வை அமித் ஷா மிரட்​டிப் பணிய வைத்​துள்​ளார். அமமுக பொதுச்​செய​லா​ளர்

டிடி​வி. தினகரனுக்கு என்​னுடைய வாழ்த்​துகள். ஆட்​சி​யில் பங்​கு, அதி​காரத்​தில் பங்கு என அவரிட​மிருந்து ஒரு குரல் வந்​திருப்​பது மிக​வும் பாராட்​டுக்​குரியது.

திமுக எம்​பி-​யான அப்​துல்​லா​வுக்கு ஆர்​எஸ்​எஸ் குறித்து முழு​மை​யாக தெரிய​வில்​லை. ஆர்​எஸ்​எஸ் அமைப்பை நெஞ்​சுக்கு நேராக எதிர்த்து நிற்​பது காங்​கிரஸ்​காரன். அவர்​களு​டன் எந்​தக் காலத்​தி​லும் சமரசம் கிடை​யாது. யாரைப்​பற்றி பேசுகி​றோம் என்​பதை யோசித்​துப் பேச வேண்​டும். தயவு செய்து மரி​யாதை கொடுத்து மரி​யாதை வாங்க வேண்​டும்.

லயோலா கல்​லூரி மாண​வர்​கள் எடுத்த கருத்​துக்​கணிப்​பில் தமி​ழ​கத்​தில் எந்த ஒரு கட்​சி​யும் தனிப் பெரும்​பான்மை பெற்று ஆட்​சிக்கு வரப்​போவ​தில்லை என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கூட்​டணி என்​பது அதில் உள்ள அனைத்​துக் கட்​சிகளும் சேர்ந்​து​தான் வெற்​றி​பெற வைக்க முடிகிறது.

நாடு முழு​வதும் இண்​டியா கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும் என நினைக்​கும் காங்​கிரஸ், அதேசம​யம் அதி​காரத்​தி​லும் பங்கு வேண்​டும் என நினைக்​கிறது. காங்​கிரஸ் கட்சி கூட்​டணி வைக்​கும் மற்ற மாநிலங்​களில் அதி​காரத்​தில் பங்​குபெற காங்​கிரஸ் தயா​ராக இருக்​கிறது. அதே​போல் தமி​ழ​கத்​தி​லும் கூட்​டணி ஆட்சி என்ற ஒரு சிந்​தனை வந்​திருக்​கிறது.

காங்​கிரஸை பொறுத்​தமட்​டில் கட்சி சார்​பில் வாக்​குறு​தி​களைச் சொல்​லும் அதை நிறை​வேற்ற காங்​கிரஸுக்கு அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என்ற காலம் வந்து விட்​டது. தமி​ழ​கத்​தில் இண்​டியா கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்ற திசையை லயோலா கருத்​துக்​கணிப்பு காட்​டி​யுள்​ளது.

திமுக தனி​யாக ஆட்சி அமைக்க முடி​யாது என்ற திசையை​யும் லயோலா கல்​லூரி கருத்​துக்​கணிப்பு காட்​டி​யுள்​ளது. கூட்​ட​ணிக் கட்​சி​யில்​லாமல் தமி​ழ​கத்​தில் எந்​தக் கட்​சி​யும் ஆட்சி அமைக்​க முடி​யாது. ​ராகுல்​ ​காந்​தி​யின்​ பலத்​தைப்​ ​பார்​த்​துத்​ ​தான்​ எங்​களு​டன்​ மற்​ற கட்​சிகள்​ கூட்​ட​ணி வைக்​கின்​ற​ன. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

மாணிக்கம் தாகூர் | கோப்புப்படம்
கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த வழக்கு: தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in