முதல்வரிடம் மனு கொடுக்க பாய்ந்து வந்த நபரால் பரபரப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​விரு​கம்​பாக்​கத்​தில் ஏவி.எம்​.சர​வணனின் நினை​வேந்​தல் படத்​திறப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்​பட்டு சென்​றார்.

முதல்​வரின் பாது​காப்பு அணிவகுப்பு வாக​னம் ஆற்​காடு சாலை​யில் வரும்​போது, இளைஞர் ஒரு​வர் முதல்​வரிடம் மனு கொடுக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர்.

விசா​ரணை​யில், மனு அளிக்க முயன்​றவர் விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த செல்​வ​ராஜ் (33) என்​பதும், திமுக ஒன்​றிய மாணவரணி துணைச் செயலர் என்​பதும் தெரிய​வந்​தது. இவரது தாய், தந்தை இரு​வருக்​கும் கண் தெரி​யாது.

வாய் பேச​வும் முடி​யாது. தனது குடும்ப சூழ்​நிலை காரண​மாக இந்து சமய அறநிலை​யத் துறை​யில் பணி வழங்க வேண்​டும் என குறிப்​பிட்​டிருந்த மனுவை அளிக்க முயன்​றது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரது மனுவை விரு​கம்​பாக்​கம் போலீ​ஸார் பெற்​றுக் கொண்டு அவரை அனுப்​பி வைத்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கடற்கரை - செங்கை இடையே ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in