கடற்கரை - செங்கை இடையே ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

கடற்கரை - செங்கை இடையே ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: மின்​சார ரயில் இயக்​கம் மற்​றும் பயணி​கள் வசதியை கருத்​தில்​ கொண்​டு, சென்னை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் ஏசி மின்​சார ரயில்​களின் சேவை​யில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்பட உள்​ளன.

இதன்​படி, சென்னை கடற்​கரை​யில் இருந்து பிற்​பகல் 2.30 மணிக்கு புறப்​பட்டு செங்​கல்​பட்டு செல்ல வேண்​டிய ஏசி மின்​சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்​பட்டு தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​படும்.

தாம்​பரத்​தில் இருந்து மதி​யம் 1 மணிக்கு புறப்​பட்டு சென்னை கடற்​கரைக்கு செல்ல வேண்​டிய ஏசி மின்​சார ரயில், இனி பிற்​பகல் 3.23 மணிக்கு புறப்​படும்.

செங்​கல்​பட்​டில் இருந்து கடற்​கரைக்கு மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்​டிய ஏசி மின்​சார ரயில் இனி, தாம்​பரத்​தில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்​பட்​டுச் செல்​லும். சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

கடற்கரை - செங்கை இடையே ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in