மதுரையில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாடு மையம் திறப்பு: சர்வதேச விமான நிலைய அந்தஸ்து பெற்றது

மதுரையின் வலிமை உலகுக்கு தெரியும் என அமைச்சர் நம்பிக்கை
மதுரையில் நடந்த சர்வதேச விமான நிலைய விழாவில் மத்திய அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பேசினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர்.

மதுரையில் நடந்த சர்வதேச விமான நிலைய விழாவில் மத்திய அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பேசினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர்.

Updated on
2 min read

மதுரை: மதுரை சர்​வ​தேச விமான நிலைய அந்​தஸ்தை பெற்​றுள்​ள​தால் இந்​நகரின் வலிமை இனி உலகுக்கு தெரி​யும் என மத்​திய விமான போக்குவரத்துத் துறை அமைச்​சர் கிஞ்​ச​ராபு ராம் மோகன் நாயுடு நம்​பிக்கை தெரி​வித்​தார்.

மதுரை விமான நிலை​யத்தை முறைப்​படி சர்​வ​தேச விமான நிலை​ய​மாக பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டு, கூடு​தல் விமானங்​களை பாது​காப்​பாக இயக்​கும் வகை​யில் புதிய வான் போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு மையத்​தை​யும் அமைச்​சர் கிஞ்​ச​ராபு ராம் மோகன் நாயுடு நேற்று திறந்து வைத்​தார்.

அப்​போது அவர் பேசியது: தமிழகத்தின் 3-வது பெரிய நகரம் மதுரை. இது தமிழத்​தின் நுழை​வா​யில் மட்​டுமல்ல, உண்​மை​யான இந்​திய கலாச்​சா​ரம், ஆன்​மாவை​யும் சுமந்து நிற்​கும் ஒருநகரம். இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​கள், உலகின் பல பகுதி​களில் இருந்து மக்​கள் மதுரைக்கு வரு​கின்​றனர். மதுரை தமிழகத்​தின் கலாச்​சார தலைநகரம், ஆன்மிக மையம், மேலும் தொழில், கல்வி மைய​மாக​வும் வளர்​கிறது.

இதனால் மதுரைக்​குத் தேவை​யான அனைத்து ஆதர​வை​யும் வழங்க வேண்​டும் என்​ப​தில் மத்​திய அரசு உறு​தி​யாக இருந்​தது. வளர்ச்சி என்​பது பயணி​கள் போக்​கு​வரத்​து, சரக்கு போக்​கு​வரத்​தில் இருந்து தொடங்​கு​கிறது. மதுரையை நாட்​டின் பிற பகு​தி​களு​ட​னும், உலகத்​துட​னும் இணைக்​கும் போது​தான் வர்த்​தகம் தொடங்​கு​வதுடன் முதலீடு​களும் வரும்.

பவ்​வேறு மேம்​பாட்டு நோக்​கத்​துடன்​தான் சுமார் 30 ஆண்​டு​கால கோரிக்​கையை தற்​போதுநிறைவேற்றி உள்​ளோம். ராஜன் செல்​லப்பா எம்​எல்ஏ பேசும்போது 1991-ம் ஆண்​டிலேயே மக்​களவை​யில் மதுரை சர்வ​தேச விமான நிலை​யத்​துக்​காக குரல் கொடுத்​த​தாகப் பகிர்ந்​தார். இதில் ஒருவர், இருவருக்கு மட்​டுமல்​லாமல் அனை​வரின் பங்​களிப்​பும் உள்​ளது. அதற்​கும் மேலாக பிரதமர் மோடி​யின் தமிழகம் மீதான அன்​பும் அக்​கறை​யாலேயே தற்​போது இது சாத்​தி​ய​மாகி உள்​ளது. இவ்​வாறு அமைச்சர் தெரி​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மக்​களவை உறுப்​பினர்​கள் சு.வெங்​கடேசன் (மதுரை), மாணிக்​கம் தாகூர் (விருதுநகர்), திருப்​பரங்​குன்​றம் எம்​எல்ஏ வி.​வி.​ராஜன் செல்​லப்​பா, மத்​திய விமான போக்​கு​வரத்து துறை இணை இயக்​குநர் விபின்​கு​மார், மதுரை விமான நிலைய இயக்​குநர் முத்​துக்​கு​மார் மற்​றும் பலர் கலந்​து​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>விமான நிலையத்துக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள பெயர் பலகை. படங்கள்: நா.தங்கரத்தினம்.</p></div>

விமான நிலையத்துக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள பெயர் பலகை. படங்கள்: நா.தங்கரத்தினம்.

'மக்​களவை​யில் நன்றி தெரி​விப்​போம்' - மதுரை எம்.பி. சு.வெங்​கடேசன் பேசும்போது, சர்​வ​தேச அந்​தஸ்து மதுரை விமான நிலை​யத்​துக்கு கிடைத்​தது வரலாற்று சிறப்​புமிக்க நிகழ்​வு. இதற்கு விடா​மல் மக்​களவை​யில் குரல் கொடுத்த முன்​னாள் எம்​.பி.க்​களுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நிச்​சய​மாக இந்த பணியை ஆற்​றியதற்​காக மத்​திய விமானப் போக்​கு​வரத்​துறை அமைச்​சருக்கு மக்​களவை​யில் எங்​களது பாராட்​டு​களை நிச்சயம் தெரி​விப்​போம். அவருக்​கும், பல முயற்​சிகள் செய்த தமிழக அரசுக்​கும் மதுரை உள்​ளிட்ட தென்​மாவட்ட மக்​கள் சார்​பில் நன்றி தெரிவிக்​கிறோம் என்​றார்​.

<div class="paragraphs"><p>மதுரையில் நடந்த சர்வதேச விமான நிலைய விழாவில் மத்திய அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பேசினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர்.  </p></div>
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in