தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்
Updated on
2 min read

சென்னை: தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரம் நடத்​தி​யது தொடர்​பான வழக்​கில், திமுக எம்​எல்ஏ செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாருக்கு நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

‘‘சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயருக்கு எதி​ராக தீர்​மானம் கொண்டு வரும் போது ஆதர​வாக வாக்களித்​தால், ரூ.35 கோடி தரு​வ​தாகக் கூறி முக்​கியக் கட்​சி​யின் சார்​பில் சிலர் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டனர். அதற்கு மறுப்பு தெரி​வித்​த​தால் மிரட்​டல் விடுத்​தனர்’’ என்று கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​திருந்​தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில் கடந்த ஜூன் 29-ம் தேதி திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இதுதொடர்பாக 9 பேரை கைது செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சரும், கோவை தெற்கு எம்​எல்​ஏவு​மான செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உட்பட மேலும் 20-க்​கும் மேற்​பட்​டோர் மீது குற்​றம் சாட்​டப்​பட்​டது. இரு​வரும் முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​னிலை​யில் நேற்று மாலை நடந்​தது. செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, ‘‘இந்த வழக்​கில் முழுக்க முழுக்க அரசி​யல் சாயம் பூசப்​பட்​டுள்​ளது. அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் செந்​தில் பாலாஜி மீது குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. ரூ.35 கோடி தரு​வ​தாகக் கூறி குதிரை பேரம் நடத்​தி​யதற்​கான தொலைபேசி உரை​யாடல் பதிவு​கள் இல்​லை. கரூரில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், திமுக​வுக்​காகச் செந்​தில் பாலாஜி பணி​யாற்​று​வதைத் தடுக்​கும் நோக்​கில் ஆளும் கட்​சி​யினரின் தூண்​டு​தலோடு போலீ​ஸார் இந்த வழக்​கைப் பதிவு செய்​துள்​ளனர். செந்​தில் பாலாஜி எங்​கும் ஓடி ஒளியப் போவ​தில்​லை. விசா​ரணைக்கு ஒத்​துழைக்க தயா​ராக இருக்​கிறார்’’ என்​றார்.

அசோக்​கு​மார் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.குமரேசன், ‘‘இந்த வழக்​கில் எந்​தப் பணமும் கைமாற​வில்​லை. எப்​போதெல்​லாம் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக வழக்​குப் பதி​யப்​படு​கிறதோ அந்த வழக்​கு​களில் அசோக் குமாரை​யும் சேர்த்து விடு​கின்​றனர். இது திட்​ட​மிட்டு ஜோடிக்​கப்​பட்ட வழக்​கு’’ என்று வாதிட்​டார்.

போலீஸ் தரப்​பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் வாதாடியாவது:

தவெக ஆட்​சி​யைக் கவிழ்க்​கும் நோக்​கில் சென்னை கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் அசோக் குமாரும், கைது செய்​யப்​பட்​ட​வர்​களும் பல முறை சந்​தித்து சதித் திட்​டம் தீட்​டி​யுள்​ளனர். இதில் ஹவாலா பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ளது. கைதானவர்​களுக்​கும் செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக் குமாருக்​கும் நெருங்​கிய தொடர்​புள்​ளது.

ஊத்​தங்​கரை எம்​எல்ஏ மட்​டுமின்றி மேலும் 10 எம்​எல்​ஏக்​களிடம் குதிரை பேரம் நடத்​தி​யுள்​ளனர். இதற்​காக ஒரு தனி​யார் நிறு​வனத்​திடம் பல கோடி ரூபாய் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜி, அசோக்​கு​மாருக்கு முக்​கிய பங்கு உள்​ளது. தேடப்​படும் முக்​கிய நபரான லட்​சுமணப் பெரு​மாள் என்​பவர் சிங்​கப்​பூரில் தலைமறை​வாக உள்​ளார். ஆட்​சி​யைக் கவிழ்க்க வேண்​டும் என்ற எண்​ணத்​துடன் நடந்​துள்ள இந்த சதித் திட்​டத்​துக்கு வலு​வான ஆதா​ரங்​கள் உள்​ளன.

செந்​தில் பாலாஜிக்​கும், அசோக் குமாருக்​கும் இதில் தொடர்பு இல்லை என்​றால் விசா​ரணைக்கு நேரில் ஆஜராகி இருக்​கலாமே? இந்த வழக்​கின் குற்​றச்​சாட்டு தீவிர​மானது. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​எல்​ஏக்​களை கோடி, கோடி​யாக பண ஆசை காட்டி விலைக்கு வாங்க முற்​பட்​டுள்​ளனர். புலன் விசா​ரணை ஆரம்​பக் கட்​டத்​தில் இருப்​ப​தால் இரு​வருக்​கும் முன்​ஜாமீன் வழங்​கக் கூடாது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், மனு​தா​ரர்​கள் செந்​தில் பாலாஜி, அசோக்​கு​மாருக்கு நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்​. இரு​வரும்​ காலை, மாலை என இரு வேளை​களி​லும்​ வி​சா​ரணை அதி​காரி முன்​பாக ஆஜராக வேண்​டும்​ என்​று நிபந்​தனை விதித்​தார்​.

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்
பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in