இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையை காட்டுகிறது: மு.வீரபாண்டியன் கண்டனம்

இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையை காட்டுகிறது: மு.வீரபாண்டியன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: இலவச மடிக்கணினி திட்​டத்தை விமர்​சிப்​பது அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் மாணவர் விரோத மனநிலையை காட்​டு​வ​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்கு மடிக்கணினி வழங்​கும் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இது மாணவர்​களின் கற்​றல் திறனை மேம்​படுத்​து​வதுடன், அவர்​களது கணினி பயன்​பாட்டு திறனை​யும், படைப்​பாக்க திறனை​யும் மேம்​படுத்​துகிறது.

குறிப்​பாக, ஏழை, எளிய குடும்​பங்​களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி வளர்ச்​சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவி​யாக இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், தற்​போது 20 லட்​சம் கல்​லூரி மாணவர்​களுக்கு இலவச மடிக்கணினி வழங்​கப்​படும் என முதல்​வர் அறி​வித்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது. இத்​திட்​டத்தை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி விமர்​சித்​திருப்​பது, அவரது மாணவர் விரோத மனநிலை​யையே காட்​டு​கிறது. இது கண்​டனத்​துக்​குரியது.

இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையை காட்டுகிறது: மு.வீரபாண்டியன் கண்டனம்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ - 844 மருத்துவ முகாம்களில் 13 லட்சம் பேர் பயனடைந்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in