“இயேசு கிறிஸ்துவின் கொள்கைகள் ஒளிவிளக்காய் திகழட்டும்” - ஆளுநர், அரசியல் தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: கிறிஸ்​து​வர்​களின் முக்​கிய பண்​டிகை​களில் ஒன்​றான ஈஸ்​டர் பண்​டிகை இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி ஆளுநர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: இயேசு கிறிஸ்​து​வின் பிறப்​பு, சிலு​வை​யில் அறையப்​பட்ட தியாக மரணம் மற்​றும் உயிர்த்​தெழுதல் ஆகிய​வற்றை நினை​வு​கூரும் கிறிஸ்தவ சகோ​தர, சகோ​தரி​கள் அனை​வருக்​கும் எனது இதயம் கனிந்த ஈஸ்​டர் வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: சிலு​வை​யில் அறையப்​பட்டு உயிர் நீத்த இயேசு, மூன்​றாம் நாளில் உயிர்த்​தெழுந்து மனிதகுலத்​துக்கு நம்​பிக்​கை​யின் ஒளியை ஏற்றி வைத்​தார். இயேசுகிறிஸ்து இந்த உலகுக்கு அருளிய அன்​பு, கருணை, தியாகம், சமத்​து​வம் மற்​றும் சேவை என்ற மகத்​தான கொள்​கைகள் என்​றும் நம் வாழ்​வில் ஒளி​விளக்​காய் திகழட்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: உலகின் இன்​றைய தேவை கருணை, சகிப்பு தன்​மை, மன்​னிக்​கும் குணம், அனைத்து உயிர்​களிட​மும் அன்பு காட்​டு​தல். அதை வலி​யுறுத்​தும் ஈஸ்​டர் திரு​நாளை கொண்​டாடும் கிறிஸ்தவ மக்​கள் அனை​வருக்​கும் ஈஸ்​டர் நல்​வாழ்த்​துகள்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர்​கள் வைகோ: கொடுந்​துயரில் தவிப்​பவர்​களுக்​கும், மரண இருளில் கலங்​கு​கின்​றவர்​களுக்​கும், அநீ​தி​யின் பாரத்​தால் நசுக்​குண்​ட​வர்​களுக்​கும், விடியலும் நீதி​யும் ஒரு​நாள் உதிக்​கவே செய்​யும் என்ற நம்​பிக்​கையை அவர்​களது மனங்​களில் ஈஸ்​டர் வழங்​கு​கிறது. கூட்​டாட்சி தத்​து​வம் வெற்​றி​பெற​வும், மாநில சுயாட்சி மலர​வும் இந்​நாளில் சபதம் ஏற்​போம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதே​போல், காங்​கிரஸ் முன்​னாள் எம்​.பி. திரு​நாவுக்​கரசர், தமிழ்​நாடு முஸ்​லிம் லீக் மாநில தலை​வர் வி.எம்​.எஸ்​.​முஸ்​தபா உள்​ளிட்​டோரும் ஈஸ்​டர் பண்​டிகைக்​கு வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in