நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: ​நா​டாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடரப்​பட்ட வழக்​கில் மத்​திய அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் கனி​யாமூரைச் சேர்ந்த மாற்​றுத் திற​னாளி​யான கே.மணிவண்​ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருந்ததாவது: 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி நாடு முழு​வதும் 2 கோடியே 68 லட்​சம் மாற்​றுத் திற​னாளி​கள் உள்​ள​தாக புள்ளி விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

ஆனால் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உயர் கல்வி மற்​றும் அரசின் வேலை​வாய்ப்​பு​களில் முறை​யான இடஒதுக்கீடு வழங்​கப்​படு​வ​தில்​லை. தற்​போது 4 சதவீத இடஒதுக்கீடு வழங்​கி​யும் அது​வும் சரி​யாக சென்​றடைய​வில்​லை.

நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மாற்​றுத்​திற​னாளி​களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்​கக்​கோரி தேர்​தல் ஆணை​யத்​தில் முறை​யிட்​டும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, இதுதொடர்​பாக உரிய சட்​ட​திருத்​தம் கொண்டு வர மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு​ கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக மத்​திய அரசு நான்கு வார காலத்​துக்​குள் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு
“மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தமிழர்கள் அதிகம் சேர வேண்டும்” - தென்மண்டல ஐ.ஜி. சரவணன் அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in