“ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்” - கே.எஸ்​.அழகிரி திட்டவட்டம்

கே.எஸ். அழகிரி

கே.எஸ். அழகிரி

Updated on
1 min read

காங்கிரஸ் தொண்​டர்​கள் ஆட்சி அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என விரும்​பு​கி​றார்​கள். அதில் நாங்​கள் உறு​தி​யாக உள்​ளோம் என அக்​கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர் கே.எஸ்​.அழ​கிரி தெரி​வித்​துள்​ளார்.

திரு​வாரூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: ஒவ்​வொரு அரசி​யல் கட்​சி​யும் வளர வேண்​டும், அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என சொல்​வது நியாய​மானது. இதை காங்​கிரஸ் கட்சி மட்​டும் சொல்​ல​வில்​லை. வைகோ, திரு​மாவளவன் மற்​றும் கம்​யூனிஸ்ட்​களும் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளனர்.

எங்​களைப் பொறுத்​தவரை திமுக எங்​களுக்கு சிறந்த தோழமைக் கட்​சி. நாங்​கள் அவரிடம் பேரம் பேசத் தேவை​யில்​லை. சிறந்த ஆட்​சியை முதல்​வர் ஸ்டா​லின் வழங்கி வரு​கி​றார். அதற்​காக எங்​கள் கட்சி கீழே​போக வேண்​டும் என்று நாங்​கள் விரும்​ப​வில்​லை.

காங்​கிரஸ் கட்​சித் தொண்​டர்​கள் ஆட்சி அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என விரும்​பு​கி​றார்​கள். அதில் நாங்​கள் உறு​தி​யாக உள்​ளோம். அது தவறில்​லை.

நண்​பர்​களாக இருக்​கிறவர்​களில் ஒரு​வர் நல்ல சட்டை போட்​டுள்​ளார். அதே​போல, எனக்​கும் ஒரு சட்டை கொடு என்று கேட்​பது தவறு இல்​லை. அதற்​காக அவர் போட்​டிருக்​கிற சட்​டையை பறிக்க வேண்​டும் என்​பது நோக்​கமில்​லை.

அதி​முகவை பொறுத்​தவரை விளிம்பு நிலைக்கு சென்​று​விட்​டது. தமி​ழ​கத்​தின் உரிமை​யைப் பற்றி அவர்​களால் பேச முடிய​வில்​லை. அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என்​கின்​றார், ஆனால், பழனி​சாமி அதி​முக தலை​மையி​லான ஆட்சி அமை​யும் என்​கி​றார். அந்த கூட்​ட​ணி​யைப் பொறுத்​தவரை, எங்​களைப் போன்ற தெளிவு இல்​லை. கருத்து உடன்​பாடு கூட அவர்​களிடம் இல்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>கே.எஸ். அழகிரி</p></div>
“திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்டும்” - செல்வப்பெருந்தகையிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in