கோடநாடு வழக்கு விசாரணை அக். 16-க்கு தள்ளிவைப்பு

கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
Updated on
1 min read

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணையை அக்​. 16-க்கு தள்​ளி​வைக்கப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்​கிணைந்த நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்பு வழக்​கறிஞர் காமேஸ்​வரன் ஆஜரானார். இவ்​வழக்​கில், ஏடிஎஸ்பி முரு​கவேல் தலை​மையிலான சிபிசிஐடி போலீ​ஸாரும் ஆஜராகினர். குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களில் வாளை​யார் மனோஜ் மட்​டும் ஆஜரா​னார்.

இந்​நிலை​யில், மாவட்ட நீதிபதி முரளிதரன் விடுப்​பில் சென்​ற​தால், மாவட்ட குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஸ்ரீதர் முன்​னிலை​யில் இந்த வழக்கு விசா​ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விசா​ரணையை அக்​. 16-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
“272 எம்பிக்கள் ஆதரவு இருப்பவரே பிரதமராக முடியும்” - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in