கரூர் கோயில் நில பதிவுக்கு தடை நீக்கத்தை எதிர்த்து மனு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: கரூரில் கோயில் நிலங்​களைப் பதிவு செய்ய விதிக்​கப்​பட்ட தடையை நீக்​கிதற்கு எதி​ரான வழக்​கில் கோயில் சொத்து தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும் தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கரூரில் பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில், கல்​யாண பசுப​தீஸ்​வரர் கோயில் உள்​ளிட்ட கோயில்​களுக்கு சொந்​த​மாக 15 கிராமங்​களில் தனி​நபர்​கள் ஆக்​கிரமிப்​பில் உள்ள 3,084.95 ஏக்​கர் நிலங்​களைபத்​திரப்​ப​திவு செய்ய தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது.

பதிவுக்​கான தடையை விலக்​கக் கோரி 3,390 பேர் அரசுக்கு மனு அளித்​தனர். மனு அடிப்​படை​யில் கோயில் நிலங்​களை பத்​திரப்​ப​திவு செய்​வதற்​கான தடையை நீக்கி உத்​தர​விடப்​பட்​டது. இந்த உத்​தர​வால் கோயில் நிலங்​களை பத்​திரப்​ப​திவு செய்​யும் வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. கோயில் நிலங்​களைத் தனி​யாருக்​குத் தாரை வார்ப்​ப​தாகும்.இது சட்​ட​விரோத​ நடவடிக்​கை. எனவே கோயில் சொத்​துகளை பத்​திரப்​ப​திவு செய்​வதற்​கான தடையை நீக்​கிப் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும். அது​வரை அரசாணை​யைச்செயல்​படுத்த இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரர் தரப்​பில், கோயில் நிலங்​கள் பதிவுக்​கான தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்​சி​யர், சென்​னை, கரூர் அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் ஆகியோர் ஒரே நாளில் உத்​தர​விட்​டுள்​ளனர் எனக் கூறப்​பட்​டது. அரசுத் தரப்​பில், கோயில்​களுக்​குச் சொந்​த​மான சில இனாம் நிலங்​கள் 1980-ம் ஆண்​டிலேயே கோயில்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. 1965 மற்​றும் 67-வது ஆண்​டு​களில் ரயத்​து​வாரி பட்​டாக்​கள் வழங்​கப்​பட்டு பலரது பெயருக்கு விற்​கப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக விசா​ரித்​த​தில் பதிவுக்​கான விண்​ணப்​பித்​தோர் 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக அங்கு வசிப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்தே கோரிக்கை ஏற்​கப்​பட்டு தடை விலக்​கப்​பட்​டது. முன்​ன​தாக கோயில் அறங்​காவலர் குழு​வுடன் ஆலோ​சிக்​கப்​பட்ட பிறகே முடி​வெடுக்​கப்​பட்​டது. மேலும் மனு​தா​ரருக்​கும் கோயிலுக்​கும் சம்​பந்​தம் கிடை​யாது. 3-வது நபர் வழக்​குத் தொடர முடி​யாது.

எனவே மனு​வை தள்​ளு​படி செய்ய வேண்​டும் எனக் கூறப்​பட்​டது. அறநிலை​யத் துறை சார்​பில், மனு​தா​ரர் ஏற்​கெனவே கோயில் அறங்​காவலர், செயல் அலு​வல் நியமனம் தொடர்​பாக வழக்​குத் தொடர்ந்​துள்​ளார். 50 ஆண்​டு​களுக்கு முன்பு செட்​டில்​மென்ட்பட்டா வழங்​கப்​பட்​டோரின் கோரிக்கை அடிப்​படை​யிலேயே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், கோயிலுக்​குக் கொஞ்​சமாவது நிலங்​கள் உள்​ளன​வா எனக் கேள்வி எழுப்​பினர். பின்​னர், கோயில் நிலங்​கள் எவ்​வளவு, அதன் மதிப்பு என்ன, அந்த நிலங்கள் யாருடைய பெயரில் உள்​ளது என்​பது தொடர்​பாக அனைத்து ஆவணங்களை​யும் கரூர் மாவட்ட ஆட்​சி​யரும், தமிழக அரசும் ஜூலை 29-ல் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். ஆக.11-ல் வழக்கு விசா​ரணைக்கு எடுக்​கப்​பட்டு உரிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என உத்​தர​விட்​டனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in