உலகில் முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் தொடக்கம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறையின் செயலர் அஜித் குமார் மொஹந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். உடன் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை உள்ளிட்டோர் உள்ளனர்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறையின் செயலர் அஜித் குமார் மொஹந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். உடன் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை உள்ளிட்டோர் உள்ளனர்.

Updated on
1 min read

சென்னை: கல்​பாக்​கம் அணு ஆராய்ச்சி மையத்​தில் உலகின் முதலா​வது ஹைட்​ரஜன் உற்​பத்தி நிலை​யம் அணுசக்​தித் துறை​யால் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னையை அடுத்த கல்​பாக்​கத்​தில் உள்ள இந்​திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்​தில், அதிவேக சோதனை ஈனுலை​யில் இருந்து வெளிவரும் வெப்​பத்​தைப் பயன்​படுத்தி உலகின் முதல் ஹைட்​ரஜன் உற்​பத்தி நிலை​யத்தை அணுசக்​தித் துறை நேற்று முன்​தினம் தொடங்​கி​யுள்​ளது. தாமிரம், குளோரின் வேதிப்​பொருட்​களைப் பயன்​படுத்தி (தாமிரம்​-குளோரின் வெப்ப வேதி​யியல் சுழற்​சி) இந்த புதிய முறை​யில் ஹைட்​ரஜன் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இந்த நிலை​யத்தை அணுசக்தி துறை செயலர் அஜித்​கு​மார் மொஹந்தி திறந்து வைத்​தார். இதற்கு அணு ஆராய்ச்சி மையத்​தின் இயக்​குநர் ஸ்ரீகு​மார் ஜி.பிள்ளை முன்​னிலை வகித்​தார்.

இந்தப் புதிய தொழில்​நுட்​பத்தை மும்​பை​யில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்​நாட்​டிலேயே வடிவ​மைத்​துள்​ளது. அணுசக்​தி​யைப் பயன்​படுத்தி எப்​படி ஹைட்​ரஜனை உற்​பத்தி செய்​வது என்​பதை நிரூபித்​துக் காட்​டும் ஒரு முன்​னோடி மைய​மாக இது அமைக்​கப்​பட்​டுள்​ளது. அணு உலை வெப்​பத்​தின் மூலம் ஹைட்​ரஜனை உற்​பத்தி செய்​வது ஒரு மாபெரும் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யாகும்.

இதன்​மூலம், சுற்​றுப்​புறச் சூழலை பாதிக்​காத தூய்​மை​யான ஹைட்​ரஜனை எதிர்​காலத்​தில் பெரு​மள​வில் உற்​பத்தி செய்ய முடி​யும். இதுதவிர பெட்​ரோல், டீசலுக்கு மாற்​றாக எதிர்​காலத்​தின் முக்​கிய எரிபொருளாக ஹைட்​ரஜன் திகழ வாய்ப்​புள்​ளது. உலகம் முழு​வதும் பல்​வேறு வழிகளில் ஹைட்​ரஜன் உற்​பத்தி செய்​யப்​பட்​டாலும், கல்​பாக்​கத்​தில் பயன்​படுத்​தப்​படும் இந்த புதிய முறை​யில் குறைந்த வெப்​பத்​திலேயே அதிக அளவில் ஹைட்​ரஜனை உற்​பத்தி செய்ய முடி​யும் என்​ப​தால் இது மிக​வும் சிறந்​த​தாகக் கருதப்​படு​கிறது.

அணுசக்​தி​யைப் பயன்​படுத்​து​வ​தால், நிலக்​கரி போன்ற எரிபொருட்​களின் தேவை குறை​கிறது. மேலும், சுற்​றுப்​புறச் சூழலை மாசடையச் செய்​யும் புகைகள் வெளி​யேறு​வதும் தடுக்​கப்​படு​கிறது. அணுசக்தி மூலம் வணி​கரீ​தி​யாக ஹைட்​ரஜனை உற்​பத்தி செய்​வதற்​கான எதிர்​கால ஆராய்ச்​சிகளுக்​கும் இந்த மையம் பெரிதும் உதவும்.

தொடக்க நிகழ்ச்​சி​யில் அஜித்​கு​மார் மொஹந்தி பேசும்​போது, “ஹைட்​ரஜன் போன்ற மாற்று எரிபொருட்​களை அணுசக்தி மூலம் உரு​வாக்​கு​வது, எதிர்​கால எரிசக்​தித் தேவைக்கு மிக முக்​கிய​மான​தாகும். எவ்​வித சுற்​றுச்​சூழல் மாசும் இல்​லாமல் மின்​சா​ரத்​தை​யும், அதிக வெப்​பத்​தை​யும் கொடுக்​கும் ஆற்​றல் அணுசக்​திக்கு மட்​டுமே உள்​ளது. இது இந்​தி​யா​வின் எரிசக்​தித் தேவைக்​கும், சுற்​றுச்​சூழல் மாசைக் குறைக்​கும் இலக்​கு​களுக்​கும் பெரு​மளவு உதவும். இந்த மேம்​பட்ட அறி​வியல் கருத்தை சாத்​தி​ய​மாக்​கிக் காட்​டிய, பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்​திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானிகளுக்கு வாழ்த்​துகள். இந்த சாதனை, அணுசக்தி தொழில்​நுட்​பங்​களில் இந்​தி​யா​வின்​ வளர்ந்​து வரும்​ ​திறன்​களுக்​கு ஒரு ​சான்​றாகும்​’’ என்​றார்.

<div class="paragraphs"><p>கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறையின் செயலர் அஜித் குமார் மொஹந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். உடன் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை உள்ளிட்டோர் உள்ளனர். </p></div>
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in