மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்: 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் உறுதி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்து, 10 பேருக்கு அதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.  உடன் துணை முதல்​வர் உதயநிதி, தலைமை செய​லா​ளர் முரு​கானந்​தம், சமூக சேவகி கிருஷ்ணம்​மாள் ஜெகந்​நாதன், பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசன்.படம்: ம.பிரபு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்து, 10 பேருக்கு அதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார். உடன் துணை முதல்​வர் உதயநிதி, தலைமை செய​லா​ளர் முரு​கானந்​தம், சமூக சேவகி கிருஷ்ணம்​மாள் ஜெகந்​நாதன், பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசன்.படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தின் 2-ம் கட்ட விரி​வாக்​கத்தை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மகளிர் உரிமைத் தொகை உயர்த்​தப்​படும் என்று தெரி​வித்​தார்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்​திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் பயனடைந்த மற்​றும் சாதனை படைத்த பெண்​களின் வெற்றி கதைகளை வெளிக்​கொணரும் நிகழ்​வாக சென்​னை​யில் `வெல்​லும் தமிழ்ப் பெண்​கள்' எனும் தலைப்​பில் தமிழகத்​தின் சாதனை பெண்​களின் வெற்றி விழா நேற்று நடை​பெற்​றது.

இதில், மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தின் 2-ம் கட்ட விரி​வாக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்​கான ஏடிஎம் அட்​டைகளை வழங்கி பேசி​ய​தாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டம் மாபெரும் வெற்றி பெற்​றிருக்​கிறது. விடியல் பயணம், புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டங்​களின் வாயி​லாக ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் பணப்​புழக்​க​மும், சேமிப்​பும் அதி​கரித்​திருக்​கிறது.

இதன் மூலம் சத்​தான உணவு, குழந்​தைகளுக்​கான கல்விக்​குச் செலவு என வாழ்க்​கைத்​தரம் உயர​வும், மறை​முக​மாக​வும் இது உதவிக்​கொண்டு இருக்​கிறது. மக்​கள்​நலத் திட்​டங்​களை இலவசங்​கள் என்று கொச்​சைப்​படுத்​தி​ய​வர்​கள் கூட இந்த திட்​டத்​தை, அவர்​கள் மாநிலத்​தில் செயல்​படுத்த தொடங்​கி​விட்​டார்​கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டத்​தில் இது​வரை, 1 கோடியே 13 லட்​சத்து 75,492 பேருக்கு வழங்​கி​யிருக்​கிறோம். இந்த எண்​ணிக்​கையை அதி​கரித்​து, 16 லட்​சத்து 94,339 பேருக்கு ரூ.1,000 போட்​டு​விட்​டோம். இனி 1 கோடியே 30 லட்​சத்து 69,831 பேருக்கு மாதம் தொடர்ந்து ரூ.1,000 கிடைக்​கும். தலைநிமிரும் தமிழகத்​தில், பெண்​கள் உயர்ந்து நடை​போட, நிச்​ச​யம் உரிமைத்​தொகை​யும் உயரும். இந்த தொகை உங்​களின் உயர்​வுக்கு மட்​டுமல்ல, உங்​கள் குழந்​தைகளின் கல்விக்கு பயன்பட வேண்​டும். தலை​முறை​கள் தழைக்க பெண்​கள் முன்​னேற்​ற​மும், பெண் கல்​வி​யும் அவசி​யம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த விழா​வில் பெண்​கள், தொழில் முனை​வோர், தோழி விடுதி பயனாளி​கள் தங்​கள் அனுபவங்​களை பகிர்ந்து கொண்​டனர். பெண்​கள் மட்​டுமே உள்ள நாதாஸ்வர குழு​வின் வாத்​திய நிகழ்ச்​சி, பெண் பட்​ட​தா​ரி​கள் கொண்ட இசைநிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்​துறை, மருத்​து​வ​மனை என பல துறை​களில் நிர்​வாக பொறுப்​பில் உள்ள பெண் ஆளு​மை​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், சமூக சேவகி கிருஷ்ணம்​மாள் ஜெகந்​நாதன், பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசன், இஸ்ரோ திட்ட இயக்​குநர் நிகர் ஷாஜி, அமைச்​சர்​கள் சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன், டி.ஆர்​.​பாலு எம்​.பி., தலைமை செய​லா​ளர் முரு​கானந்​தம், நடிகர் சத்​ய​ராஜ், நடிகைகள் ரோகிணி, தேவ​யானி, சினிமா இயக்​குநர்​கள் ராஜு முரு​கன்​, ஞானவேல்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்து, 10 பேருக்கு அதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.  உடன் துணை முதல்​வர் உதயநிதி, தலைமை செய​லா​ளர் முரு​கானந்​தம், சமூக சேவகி கிருஷ்ணம்​மாள் ஜெகந்​நாதன், பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசன்.படம்: ம.பிரபு</p></div>
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - 1 டாலருக்கு ரூ.90.56 ஆக சரிவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in