சென்னையில் பேட்டி அளித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை.

சென்னையில் பேட்டி அளித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை.

காடுவெட்டி குரு மகள் ஜன.9-ல் புதிய கட்சி தொடங்குகிறார்

Published on

வன்​னியர் சங்​கத் தலை​வ​ராக​வும், பாமக முன்​னணி தலை​வ​ராக​வும் இருந்​தவர் மறைந்த காடு​வெட்டி குரு. இவரின் மகள் குரு. விரு​தாம்​பிகை. இவர், ஜெ குரு பாட்​டாளி மக்​கள் கட்சி என்ற புதிய கட்​சியை தொடங்க உள்​ளார்.

இதுகுறித்​து, சென்​னை​யில் அவர் கூறிய​தாவது: புதிய கட்​சியை சேலம் ஓமலூரில் வரும் 9-ம் தேதி தொடங்​க​வுள்​ளோம். டெல்​லி​யில் தேர்​தல் ஆணை​யத்​தில் கட்​சியை பதிவு செய்​துள்​ளோம். கட்​சி​யின் கொள்கை சமூக நீதி ஆகும். அனைத்து சமு​தாய மக்​களுக்​கும் சரி​யான சமமான சமூக நீதி கிடைக்க வேண்​டும். சமூக நீதியை முன்​வைத்து வன்​னியர் சங்​கம் உரு​வாக்​கப்​பட்​டது.

இந்த சங்​கத்​துக்கு தந்தை காடு​வெட்டி குரு கடைசி வரை உறு​தி​யாக உண்​மை​யாக இருந்​தார். பாமக​வுக்​காக​வும் தந்தை பாடு​பட்​டார். ஆனால், பாமக நிறு​வனர் ராம​தாஸ் தனது மகன் பாசத்​தால் கட்சி கொள்​கை​யில் இருந்து வெளியே வந்​தார். தனது மகனுக்​காக, இந்த சமு​தா​யத்தை பின்​தங்​கிய நிலைக்கு கொண்டு போனார். தற்​போது, அந்த மகன், பாமக நிறு​வனர் ராம​தாஸை மோச​மாக எதிர்ப்​பதை ஏற்​று​கொள்ள முடிய​வில்​லை.

ராம​தாசும், அன்​புமணி​யும் சண்டை போட்டு இந்த சமு​தாய மக்​களை பின்​தங்​கிய நிலை​யிலேயே வைத்​துள்​ளனர். மேலும், எல்லா கட்​சிகளும் வன்​னியருக்கு எதிர்ப்​பான நிலை​யிலேயே உள்​ளன. கட்​சியை தொடங்​கி, வரும் 9-ம்​தேதி முதல் சேலம், தரு​மபுரி உள்பட வட மாவட்​டங்​களில் 50 நாட்​கள் நடைபயணம் மேற்​கொண்டு மக்​களை சந்​தித்​து, ராம​தாஸ், அன்​புமணி ஆகி​யோர் செய்த சூழ்ச்​சிகளை எடுத்து சொல்ல உள்​ளோம். கட்​சி​யின் மாநில மாநாட்டை பிப்​.22-ம் தேதி தரு​மபுரி​யில் நடத்த இருக்​கி​றோம்​.​நாங்​கள் வலு​வான கூட்​டணி அமைப்​போம். பிப்​.1-ம் தேதி தந்​தை​யின் பிறந்​த​நாள் வரு​கிறது. அதை வன்​னியர் ஜெயந்​தி​யாக கொண்​டாட உள்​ளோம்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>சென்னையில் பேட்டி அளித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை.</p></div>
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை இழுத்தடிக்க வேண்டியதில்லை - சீமான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in