உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தின் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தின் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தின் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து
கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை: இபிஎஸ் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in