குடிமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் உயரிய கடமை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

குடிமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் உயரிய கடமை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
Updated on
1 min read

மதுரை: ​நாட்​டின் குடிமக்​களைப் பாது​காப்​பது அரசுகளின் உயரிய கடமை என்​று, மனு சாஸ்​திரத்தை (மனுஸ்​மிரு​தி) சுட்​டிக்​காட்டி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் தெரி​வித்​தார்.

சிவ​காசியை சேர்ந்த மலர்​விழி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது கணவர் மாரி​முத்து 2021-ம் ஆண்டு மத்​திய ஆப்​பிரிக்கா​வுக்கு தீப்​பெட்டி தொழிற்​சாலைக்கு வேலைக்கு சென்​றார்.

அங்கு பணி​யில் இருந்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக உயி​ரிழந்​தார். என் கணவர் இறப்​புக்கு கேமரூன் நாட்டு தொழிற்​சாலை இந்​திய மதிப்​பில் ரூ.15 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​வ​தாக தெரி​வித்​தது. இழப்​பீட்​டுத்​தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்து நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் மன்​னன் என்​பவன் மக்​களை மகிழ்ச்​சி​யாக​வும், வளமாக​வும் வைத்​திருக்க வேண்​டும். வரு​மானத்​தில் ஆறில் ஒரு பங்​கைப் பெற்​றாலும், மக்​களைப் பாது​காக்​கத் தவறிய மன்​னன் பாவி​யாகிறான் என்று மகா​பாரதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

தற்​போது மன்​னன் என்​றால் அரசுகள். அரசுகள் மக்​கள் நலன் சார்ந்து சிந்​திக்க வேண்​டும், செயல்பட வேண்​டும் என மனு சாஸ்​திரத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதை புத்த மதமும் குறிப்​பிடு​கிறது. அரசு வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள் மற்​றும் வெளி​நாட்டு பணப் பரி​மாற்​றங்​கள் மூலம் பெரும் அந்​நியச் செலா​வணியை ஈட்​டு​கிறது.

புலம்​பெயர்ந்த தொழிலா​ளர்​களிட​மிருந்து அரசுகள் நன்​மை​களைப் பெறும்​போது, வெளி​நாட்டு வேலை​வாய்ப்​பு​களில் பிரச்​சினை​கள் எழும்​போது அவர்​களை மீட்க விரைந்து செயல்​பட்​டு, உரிய இழப்​பீடு கொடுப்​பதும் கடமை​யாகும்.

எனவே, தற்​போதைய காலச்​சூழலுக்கு ஏற்ப சட்​டங்​களில் சில திருத்​தங்​களை மேற்​கொள்ள வேண்​டும். தனது குடிமக்​கள் பாது​காப்பு குறித்து மத்​திய அரசு கொள்கை சார்ந்த முடி​வெடுக்க வேண்​டும்.

இந்த வழக்​கில் மனு​தா​ரின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்​க வேண்​டும். அவருக்கு கூடு​தல் இழப்​பீடு கிடைக்க மத்​திய அரசு சட்​டப் போராட்​டம் நடத்த தயா​ராக இருக்க வேண்​டும். மனு​தா​ரருக்கு கூடு​தல் இழப்​பீடு கிடைக்க இந்​திய தூதரகம் அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

குடிமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் உயரிய கடமை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
நீதிமன்ற உத்தரவை மீறுவதை ஏற்க முடியாது: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in