உலக அரங்கில் முன்னிலை வகிக்க சென்னையின் வளர்ச்சி பல மடங்காக வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

உலக அரங்கில் முன்னிலை வகிக்க சென்னையின் வளர்ச்சி பல மடங்காக வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: உலக அரங்​கில் முன்​னிலை வகிக்க, சென்னையின் வளர்ச்சி பல மடங்​காக இருக்க வேண்​டும். நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்​டும் என்று தமிழக மின்​வாரி​யத்​தின் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தெரி​வித்​தார்.

சென்னையின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​பது குறித்து கருத்​தரங்​கம் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில், தமிழக மின்​வாரி​யத்​தின் தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: சென்​னை​யின் குறிப்​பிடத்​தக்க அம்​சங்​களில் ஒன்று அதன் வரலாறு.

இந்த நகரம் படிப்​படி​யாகக் கட்​டமைக்​கப்​பட்​டது. தமிழகத்​தின் வளர்ச்சிக்கு சக்தி அளிக்​கும் கலாச்​சா​ரம், தொழில்​முனை​வு, மீள்​தன்மை மற்​றும் அசா​தாரண திறமை​களைக் கொண்​டுள்​ளது சென்​னை. மருத்​து​வம், கலாச்​சா​ரத்​தின் தலைநக​ராக​வும் விளங்​கு​கிறது.

ஒருங்​கிணைப்பு தேவை: நகரில் போக்​கு​வரத்தை வடிவ​மைக்​க​வும், பொது சுகா​தா​ரத்தை வலுப்​படுத்​த​வும், பொருளா​தார வாய்ப்பை உரு​வாக்​க​வும் தொடர்ச்​சி​யாக வழி​காட்ட வேண்​டும். உலக அரங்​கில் நம்​பிக்​கை​யுடன் போட்​டி​யிடு​வதன் மூல​மாக சென்னை முன்​னிலை வகிக்க வேண்​டும்.

அதற்கு அரசு, தனி​யார் நிறு​வனங்​கள் மற்​றும் குடிமக்​கள் இடையே ஒருங்​கிணைப்பு தேவைப்​படு​கிறது. நாம் ஒரே நோக்​கில் ஒன்​றாக நகரும்​போது, நல்ல முன்​னேற்​றம் கிடைக்​கும்.

சென்​னை​யில் வளர்ச்சி பல மடங்​காக இருக்க வேண்​டும். மேலும், நீடித்த வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அதி​முக முன்​னாள் அமைச்​சர் மாஃபா பாண்​டிய​ராஜன், ‘சூப்​பர் சென்​னை’ நிர்​வாக இயக்​கு

நர் ரஞ்​சித் ரத்​தோட் மற்​றும் பல்​வேறு நிறு​வனங்​களின் தலை​வர்​கள் கலந்​து​கொண்​டு, தங்​கள் அனுபவங்​களை பகிர்ந்து கொண்​டனர்.

உலக அரங்கில் முன்னிலை வகிக்க சென்னையின் வளர்ச்சி பல மடங்காக வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை | வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in