ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை

அறிகுறி உள்ளவர்களை 21 நாள் கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஆப்​பிரிக்க நாடு​களில் எபோலோ வைரஸ் பாதிப்பு இருப்​ப​தால், சென்னை விமான நிலை​யத்​தில் சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ஆப்​பிரிக்கா நாடு​களான உகாண்​டா, காங்​கோ, சூடான் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில், எபோலோ வைரஸ் பரவி வரு​கிறது. அந்த வைரஸ் மற்ற நாடு​களுக்​குப் பரவாமல் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​படி உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, மத்​திய சுகா​தா​ரத்​துறை, அனைத்து விமான நிலை​யங்​களி​லும் தீவிர கண்​காணிப்​பு​களை மேற்​கொள்​ளும்​படி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

ஆலோ​சனைக் கூட்​டம்: அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் எபோலோ தடுப்பு நடவடிக்​கைகள் குறித்து சுகா​தா​ரத் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது எபோலோ பாதிப்பு அதி​க​முள்ள ஆப்​பிரிக்க நாடு​களாக காங்​கோ, உகாண்​டா, தெற்கு சூடான் நாடு​களில் இருந்து சென்​னைக்கு நேரடி விமான சேவை​கள் இல்​லா​விட்​டாலும், இணைப்பு விமானங்​களில் வரும் பயணி​களை தீவிர​மாகக் கண்​காணித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது.

அத்​தகைய நாடு​களில் இருந்து வரும் பயணி​களுக்கு விமானத்​தில் சுய அறி​விப்பு படிவங்​களை வழங்க வேண்​டும். சென்னை விமான நிலை​யத்​தில் இறங்​கு​வதற்கு முன்​பாக அந்​தப் படிவங்​களை முழு​மை​யாக நிரப்​பி, விமான பணிப்​பெண்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும். அதே​போல், எபோலோ நோய் அறிகுறிகள், தடுக்க வேண்​டிய அவசி​யம் குறித்து பயணி​களுக்கு விமானங்​களில் அறி​விப்​பு​களை தொடர்ந்து செய்ய வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

விமானப் பயணி​கள் யாருக்​காவது காய்ச்​சல், தலை​வலி, வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, உடல் சோர்வு இருந்​தால், அதை உடனடி​யாக விமான ஊழியர்​களிடம் தெரிவிக்க வேண்​டும். விமானங்​களில் இருந்து இறங்கி குடி​யுரிமை சோதனை பிரிவு​களுக்கு செல்​லும் வழிகளில், பயணி​களின் உடல் வெப்​பநிலை, உடல் நிலை​யைக் கண்​காணிப்​ப​தற்கு ஏற்​கெனவே கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு பொருத்​தப்​பட்​டுள்ள அனைத்து கண்​காணிப்பு கேம​ராக்​களும் மீண்​டும் புதுப்​பிக்​கப்​பட்டு பொருத்​தப்பட வேண்​டும்.

அந்​தக் கண்​காணிப்பு கேம​ராக்​கள் மூலம், பயணி​களின் உடல் நிலை, வெப்​பநிலை போன்​றவற்​றைக் கண்​காணித்​து, உடல்​நலம் பாதிப்பு சோர்​வுடன் வரும் பயணி​களை நிறுத்​தி, தனிமைப்​படுத்​தி, அவர்​களை விசா​ரிக்க வேண்​டும். அவர்​கள் ஆப்​பிரிக்க நாடு​களோடு தொடர்​புடைய நாடு​களுக்கு சென்று வரு​கிறார்​களா என்​ப​தை​யும் கண்​டறிய வேண்​டும்.

அதில் சந்​தேகத்​துக்கு இடமான பயணி​களை உடனடி​யாகத் தனிமைப்​படுத்​தி, அதற்​கென ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள ஆம்​புலன்​ஸ்​கள் மூலம் அவர்​களை அரசு மருத்​து​வ​மனை​களுக்கு கொண்டு சென்​று, தனி வார்​டு​களில் 21 நாட்​கள் தீவிர கண்​காணிப்​பு​களில் வைக்க வேண்​டும். மேலும், விமான நிலை​யங்​கள், விமானங்​களில் போதிய அளவில் முகக்​கவசங்​கள், கையுறை​கள், பாது​காப்பு உபகரணங்​கள், சானிடைசர்​களை வைத்​திருக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இரு​மல், சளி, காய்ச்​சல் இருக்​கும் வி​மான பயணி​கள், வி​மான நிலை​யத்​தில் உள்ள பணி​யாளர்​கள்​ முகக்​கவசம்​ அணிந்​து கொள்​ள வேண்​டும்​ என்​றும்​ அறி​வுறுத்​த​ப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in