தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக 108 இடங்​களை கைப்பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க குறைந்​தது 118 எம்​எல்​ஏக்​கள் தேவை என்​ப​தால் அறு​திப் பெரும்​பான்​மை​யைப் பெற முடி​யாத நிலை​யில் தவெக உள்​ளது.

எனவே கூட்​டணி ஆட்சி அமைப்​ப​தில் தவெக மும்​முரம் காட்டி வரு​கிறது. சுயேச்சை வேட்​பாளர்​கள் யாரும் இல்​லாத நிலை​யில், 5 எம்​எல்​ஏக்​களை வைத்​துள்ள காங்​கிரஸ், தவெக​வுடன் கைகோத்​துள்​ளது. இதனால் தவெக​வின் பலம் 113 ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது விசிக மற்​றும் கம்​யூனிஸ்ட்​டு​களின் ஆதரவை தவெக கேட்​டுள்​ளது.

ஆதரவு அளிப்​பது தொடர்​பாக கம்​யூனிஸ்ட்​கள், விசிக ஆலோ​சித்து வரு​கின்​றன. அதி​முக எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் புதுச்​சேரி​யில் முகாமிட்​டுள்​ளனர். இதனால் தமிழக அரசி​யல் களம் பரபரப்​பாக காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், விஜய்க்கு முதல்​வ​ராக பதவிப் பிர​மாணம் செய்து வைக்க வலி​யுறுத்​தி​யும் மெரினா கடற்​கரை​யில் தவெக​வினர் திரள உள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் தகவல் பரவியது. இதையடுத்து போலீ​ஸார் அந்த பகு​தி​களில் அதி​கள​வில் நிறுத்​தப்​பட்​டு, கண்​காணிப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில் தமிழகத்​தின் முக்​கிய இடங்​களில் பாது​காப்பை அதி​கரிக்க தமிழக காவல் துறைக்கு மத்​திய உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக உளவுத் துறை சுட்​டிக்​காட்டி இந்த அறி​வுறுத்​தலை வழங்கி உள்​ள​தாக போலீஸ் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
​முதல்​வர் பதவியைக் குறிவைத்து காய்நகர்த்தல்கள்: ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in