

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறு வோர் மீது ரயில்வே சட்டத்தின் படி, நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், ரயில் மூலம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ரயில்களுக்குள் அல்லது ரயில் நிலைய வளாகத்துக்குள் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது குறித்து, ஐயப்ப பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.