இளம் பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் கைது

இளம் பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் கைது
Updated on
1 min read

சென்னை: கன்​னி​யாகுமரி மாவட்​டத்தை சேர்ந்த 24 வயது இளம்​பெண் ஒரு​வர், வளசர​வாக்​கத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை மருந்​தகத்​தில் வேலை பார்த்து வந்​தார்.

அங்கு மருந்​தகப் பொறுப்​பாள​ராக வளசர​வாக்​கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்த ரஞ்​சித்​கு​மார் (37) என்​பவர் பணி​யாற்றி வந்​தார். ரஞ்​சித்​கு​மாருக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி இரண்டு குழந்​தைகள் உள்​ளன.

இந்​நிலை​யில், ரஞ்​சித்​கு​மார் தன்னை திரு​மணம் செய்து கொள்​ளு​மாறு அப்​பெண்ணை வற்​புறுத்தி வந்​த​தாக கூறப்​படு​கிறது. ஒரு கட்​டத்​தில் அந்​தப் பெண்​ணின் புகைப்​படங்​களை ரஞ்​சித்​கு​மார் சேகரித்​து, அவருடன் தான் நெருக்​க​மாக இருப்​பது போல மார்​பிங் செய்​துள்​ளார்.

பிறகு அந்​தப் புகைப்​படங்​களை அப்​பெண்​ணிடம் காட்​டி, தன்​னுடன் வரவில்லை என்​றால் சமூக வலை​தளங்​களில் பரப்​பி​விடு​வேன் என மிரட்​டி​யுள்​ளார். ரஞ்​சித்​கு​மாரின் தொந்​தரவு காரண​மாக அந்​தப் பெண் வேலையை விட்டு நின்​று​விட்​டார். ஆனாலும், ரஞ்​சித்​கு​மார் அப்​பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்​துள்​ளார்.

போலீ​ஸார் வி​சா​ரணை

இதனால் மன உளைச்​சலுக்கு ஆளான அந்​தப் பெண், வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன் பேரில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி ரஞ்​சித்​கு​மாரை கைது செய்து சிறை​யில்​ அடைத்​தனர்​.

இளம் பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் கைது
காவலர்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த பிரேமலதா கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in