திமுக பிரமுகரிடம் வருமான வரித் துறை விசாரணை முடிந்தது

திமுக பிரமுகரிடம் வருமான வரித் துறை விசாரணை முடிந்தது
Updated on
1 min read

தேனி: தேனி மாவட்​டம் போடி திமுக நகராட்​சித் தலை​வர் ராஜ​ ராஜேஸ்​வரி​யின் கணவர் சங்​கர். திமுக மாநில செயற்​குழு உறுப்​பின​ராக​வும், போடி 29-வது வார்டு கவுன்​சில​ராக​வும் இருக்​கிறார்.

இவர், வெளி​மாநிலங்​களுக்கு உரிய ஆவணங்​களின்றி ஏலக்​காய் அனுப்​பியதன் மூலம், பல கோடி வரி ஏய்ப்பு செய்​துள்​ள​தாக புகார் எழுந்​தது.

இதையடுத்​து, கடந்த 6-ம் தேதி முதல் போடி​யில் உள்ள சங்​கரின் ஏலக்​காய் கிடங்​கு, அலு​வல​கங்​களில் வணிக வரி, வரு​மான வரி மற்​றும் அமலாக்​கத் துறை​யினர் ஆய்வு மேற்​கொண்​டனர்.

மேலும், 10 பேரிடம் விசா​ரணை​யும் நடத்​தப்​பட்​டது. நேற்று முன்​தினம் விசா​ரணை முடிவடைந்த நிலை​யில், வரு​மான வரித் துறை​யினர் நேற்று சில ஆவணங்​களை மட்​டும் எடுத்​துச் சென்​றனர்.

இதுகுறித்து சங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “3 பங்​கு​தா​ரர்​களு​டன் ஏலக்​காய் நிறு​வனத்தை நடத்​தினேன்.

இதில் ‘அட்​வான்ஸ் டாக்​ஸ்’ கட்​டு​வது வழக்​கம். கடந்த ஓராண்​டாக ஏலக்​காய் பரிவர்த்​தனை நடக்​க​வில்​லை. வரி செலுத்​தாத​தால், சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடந்​தது" என்​றார்​.

திமுக பிரமுகரிடம் வருமான வரித் துறை விசாரணை முடிந்தது
கார்த்திகை தீபத்தூணா அல்லது அளவீட்டுக் கல்லா என சர்ச்சை: திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in