கார்த்திகை தீபத்தூணா அல்லது அளவீட்டுக் கல்லா என சர்ச்சை: திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறையினர்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறையினர்.

Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூண் தொடர்​பாக தமிழக தொல்​லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு​வினர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று மதுரை மாவட்​டம் எழு​மலை​யைச் சேர்ந்த ராம.ரவிக்​கு​மார் தொடர்ந்த வழக்​கில், தீபம் ஏற்​றலாம் என உயர்​நீ​தி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் உத்​தர​விட்​டார்.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்​ற​வில்​லை. தொடர்ந்​து, மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மற்​றும் 10 பேர் அடங்​கிய குழு​வினர் மலைக்​குச் சென்று தீபம் ஏற்​ற​வும் போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

தனி நீதிப​தி​யின் உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் மேல் முறை​யீடு செய்​த​போ​தி​லும், உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்வு அதை தள்​ளு​படி செய்​தது. உத்​தரவை அமல்​படுத்​தாத​தால் அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குத் தொடுக்​கப்​பட்​டது. அதே​நேரம், தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த மனு விரை​வி்ல் விசா​ரணைக்கு வர உள்​ளது.

இதற்​கிடையே, மலை உச்​சி​யில் உள்ள தூண், கார்த்​திகை தீபத் தூண்​தான் என்று ஒரு தரப்​பினரும், இல்லை அது நில அளவீட்​டுக்​கல் (சர்வே கல்) என்று மற்​றொரு தரப்​பினரும் தகவல்​களை பரப்பி வரு​கின்​றனர். தமிழக அரசின் தொல்​பொருள் ஆய்​வுத்​துறை 1981-ல் வெளி​யிட்ட ‘திருப்பரங்​குனறம்’ எனும் நூலில், மலை உச்​சி​யில் உள்​ளது கார்த்​திகை தீபத்​தூண் என குறிப்​பிட்​டுள்​ளது.

இந்​நூலின் 129-வது பக்​கத்​தில், “மலை அடி​வாரத்​திலிருந்து மலைக்​குச் சென்​றால் பாதி வழி​யில் தீபத்​தூண் ஒன்று இருப்​ப​தைக் காணலாம். இந்​தத் தூண் நாயக்​கர் காலத்​தைச் சேர்ந்​தது. கல்​வெட்​டுக்கு மேல் அனு​மன் ஒரு கையை ஓங்​கிக்​கொண்​டு, முகத்தை இடது பக்​கம் திரும்​பிக் கொண்​டிருக்​கும் சிற்​ப​மும் உள்​ளது.

இந்த தீபத்​தூண் ஆண்​ட​வனுடைய தலை​யின் உச்​சி​யில் நாட்​டப்​பட்​டிருப்​ப​தாக​வும், இதில் புண்​ணி​ய​வான்​கள் அனை​வரும் விளக்​கேற்​றலாம் என்​றும் அக்​கல்​வெட்டு குறிப்​பிடு​கிறது” என்ற தகவல் இடம்​பெற்​றுள்​ளது.

தமிழக அரசின் தொல்​லியல் துறையே கார்த்​திகை தீபத்​தூண் என குறிப்​பிட்​டுள்ள நிலை​யில் நேற்று தமிழக அரசின் தொல்​லியல் துறை துணை இயக்​குநர் யதீஷ்கு​மார் தலை​மை​யில், உதவி இயக்​குநர் லோக​நாதன் மற்​றும் தொல்​லியல் அலு​வலர்​கள் 7 பேர் கொண்ட குழு​வினர் நேற்று திருப்பரங்குன்றம் மலை​யில் ஆய்வு மேற்​கொண்​டனர்.

காலை 8 மணியி​லிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகு​தியை ஆய்வு செய்​து, அதில் உள்ள விவரங்​களை நகல் எடுத்​தனர். எனினும், இந்த ஆய்வு தொடர்​பான எந்த தகவலை​யும் தொல்​லியல் துறை​யினர் வெளி​யிட​வில்​லை.

<div class="paragraphs"><p>மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறையினர்.</p></div>
டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in