தமிழகத்தில் 2025-ல் மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 1,476 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் 2025-ல் மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 1,476 பேருக்கு மறுவாழ்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 2025-ம் ஆண்டு மூளைச்​சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்பு தானத்​தால் 1,476 பேருக்கு மறு​வாழ்வு கிடைத்​துள்​ளது. தமிழக மக்​களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்​புணர்வு அதி​கரித்​துள்ளதால் தமிழக அரசு சார்​பில் ‘மூளைச்​சாவு உடல் உறுப்பு மாற்று திட்​டம்’ உரு​வாக்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்​தின் மூலம் மூளைச்​சாவு அடைந்​தவர்​களின் உடல் உறுப்​புகள் தான​மாக பெறப்​பட்டு வந்​தது. பின்னர் தமிழ்​நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணை​யம் உரு​வாக்​கப்​பட்​டது. தற்​போது உடல் உறுப்பு தானம் திட்​டத்தை அந்த ஆணை​யம் செயல்​படுத்தி வரு​கிறது.

நாட்​டின் பிற மாநிலங்​களைக் காட்​டிலும், தமிழகத்​தில் உறுப்பு மாற்று நடவடிக்​கைகள் சிறப்​பாக நடை​பெறுகின்​றன. இதனால், தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்​தில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

உடல் உறுப்புகள் தானத்தை ஊக்​குவிக்​கும் வகை​யில், மூளைச்​சாவு அடைந்​த​பின் உறுப்பு தானம் செய்​தவருக்கு அரசு சார்​பில் மரி​யாதை மற்​றும் குடும்​பத்​தினர் கவுர​விப்பு நிகழ்​வு​கள் நடத்​தப்​படு​கின்​றன. 2025-ம் ஆண்​டில் மூளைச்​சாவு அடைந்​தவர்​களில், 266 பேர் உடல் உறுப்பு​களை தானம் அளித்​துள்​ளனர்.

மாநில உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் மருத்​து​வர் என்​.கோ​பால​கிருஷ்ணன் கூறிய​தாவது: தமிழக அரசின் நடவடிக்​கை​யால் உடல் உறுப்பு​கள் தானம் அளிப்​போர் எண்​ணிக்​கை, ஆண்​டு​தோறும் அதி​கரித்து வரு​கிறது. இதனால் ஆண்​டு​தோறும், 1,500 பேர் வரை பயன்​பெறுகின்​றனர்.

கடந்​தாண்டு விபத்​தில் சிக்​கி, 186 பேரும், விபத்​தில்​லாத வகை​யில் 80 பேரும் என மொத்​தம் 266 பேர் மூளைச்​சாவு அடைந்​தனர். அவர்​களில் 211 பேர் ஆண்​கள், 55 பேர் பெண்​கள். இவர்​களில் 154 பேர் அரசு மருத்​து​வ​மனை​களி​லும், 112 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் சிகிச்​சை​யில் இருந்​த​போது மூளைச்​சாவு அடைந்​த​பின், அவர்​களது உறவினர் உடல் உறுப்புகளை தானம் அளித்​தனர்.

உடல் உறுப்புகளை தானத்​தால் 1,476 பேர் பயன்​பெற்​றனர். சிறுநீரகம், கல்​லீரல், இதயம் போன்​றவற்றை தான​மாக அளிக்க பலர் முன்​வந்​தா​லும், வெளி உறுப்​பு​களை தான​மாக அளிக்க மக்​களிடையே தயக்​கம் இருக்​கிறது. கைகள் தான​மாகப் பெறப்​பட்​டாலும், அந்த உடலுக்கு செயற்கை கைகள் பொருத்​தப்​படும்.

இதனால் இறந்​தவரின் உடல் கைகள் இல்​லாமல் இருக்​கும் என்ற தயக்​கம் வேண்​டாம். அவர்​கள் தான​மாக அளித்த கைகள் மற்​றவர்​களுக்கு வாழ்வு அளிக்​கும். வெளி உறுப்​பு​கள் தானம் அளிப்​ப​தில், மக்​களிடையே உளவியல்​ ரீதி​யான சிக்​கல்​ இருப்​ப​தால்​, அதுகுறித்​து தொடர்​ந்​து விழிப்​புணர்​வு ஏற்​படுத்​தப்​படு​கிறது. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

தமிழகத்தில் 2025-ல் மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 1,476 பேருக்கு மறுவாழ்வு
​போதைப் பொருள் வழக்கில் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய ஆடை வடிவமைப்பாளர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in