

பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் வெங்கடேசன், உடன் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர் ராஜா உள்ளிட்டோர்.
தாம்பரம்: பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் டி. வெங்கடேசன் நேற்று பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகள் பற்றி எடுத்துக் கூறியும், அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்த உடன் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10 ஆயிரம் பெற்று தருவேன் என வாக்கு சேகரித்தார்.
அதிமுக பொது செயலாளர் பழனிசாமி நல்லாட்சி தருவதோடு, பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவார். பெண்கள் அச்சமின்றி வெளியில் நடமாடலாம். கொலை, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படும்.
கஞ்சா போதை இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டு கொண்டார்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ ப. தன்சிங், பல்லாவரம் பகுதி கழகச் செயலாளர் ஜெய்பிரகாஷ், கீழ்கட்டளை பகுதி கழகச் செயலாளர் சந்திரசேகர் ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.