ரூ.245 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகள் ரத்து: அறநிலையத் துறை அறிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறை
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் அறிவிக்​கப்​பட்​டு, பல்​வேறு காரணங்​களால் தொடங்​கப்​ப​டா​மல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்​பிலான 46 கட்​டு​மானப் பணி​களுக்​கான நிர்​வாக அனு​ம​தியை ரத்து செய்து அறநிலை​யத்​ துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத்​ துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: அறநிலை​யத் துறை சார்​பில் திருமண மண்​டபங்​கள், வணிக வளாகங்​கள் கட்ட வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​கள் நீதி​மன்ற தடை​யாணை காரண​மாக​வும், சம்​பந்​தப்​பட்ட கோயில்​களின் நிதிச்​சுமையை கருத்​தில் ​கொண்​டும் தற்​போது சில நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டு, தற்​போது வரை தொடங்​கப்​ப​டாத ரூ.115.77 கோடி மதிப்​பீட்​டிலான 29 திருமண மண்​டபங்​கள் கட்டும் பணி​கள் மற்​றும் ரூ.130 கோடி மதிப்​பீட்​டிலான 17 வணிக வளாகங்​கள் கட்​டும் பணி​கள் என மொத்​தம் ரூ.245.85 கோடி மதிப்​பீட்​டிலான 46 பணி​களுக்கான நிர்​வாக அனு​ம​தி​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த நிதியை கொண்டு கோயில்​கள் மற்​றும் பக்​தர்​கள் பயன்​பெறும் வகை​யில் புதிய திட்​டங்​கள் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

இந்து சமய அறநிலையத் துறை
“மாணவர் கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in