பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழைக்கு முன்பு சாலைகள் பராமரிப்பு மற்​றும் மேம்​பாட்டு பணி​களை விரைந்து முடிக்க, அனைத்து கோட்ட பொறி​யாளர்​களுக்​கும் மாநில நெடுஞ்​சாலைத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மாநில நெடுஞ்​சாலைத் துறை​யின் கீழ், மாவட்ட முக்​கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என 70 ஆயிரம் கி.மீ. தொலை​வுக்கு சாலைகள் உள்​ளன. இதில், மாவட்ட இதர சாலைகள் மட்​டுமே 45 ஆயிரம் கி.மீ. தொலை​வுக்கு உள்​ளன.

இச்​சாலைகளை பராமரிக்​க​வும் மேம்​படுத்​த​வும் தமிழகம் முழு​வதும் 68 இடங்​களில் கட்​டு​மானம் மற்​றும் பராமரிப்பு கோட்ட அலு​வல​கங்​கள் உள்​ளன. இவற்​றின் வாயி​லாக, ஒப்​பந்​த​தா​ரர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, சாலை பராமரிப்பு மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதற்​கிடை​யில் ஒப்​பந்​த​தா​ரர்​களு​டன் நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை அடுத்த மாதம் தொடங்​க​வுள்ள நிலை​யில், அதற்கு முன்​பாக சாலைகள் பராமரிப்பு மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களை முடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

‘‘தற்​போது மாநிலம் முழு​வதும் 500 சாலைகளில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், 200 சாலைத் திட்​டப்​ பணி​கள் 70% நிறைவடைந்​துள்​ளன. எஞ்​சிய சாலைப் பணி​கள் 50% முடிந்​துள்​ளன. அனைத்து பணி​களும் விரைந்து முடித்​து, பயன்​பாட்​டுக்கு கொண்​டு வரப்படும். பணி​களை கண்​காணிக்க தலைமை பொறி​யாளர்​கள் தலை​மை​யில் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன’’ என நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​கள்​ கூறினர்​.

பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்
முதலீடு ஈர்த்துள்ளதாக அரசு கூறுவது பொய்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in