வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்குக: உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்குக: உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: வெளிச்சந்​தை​யில் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய நிலை ஆணை அனு​ம​தியை விரைந்து வழங்க வேண்​டும் என உயர் அழுத்த மின் நுகர்​வோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

தமிழ்​நாட்​டில் கோடை வெப்​பத்​தால் மின்​சா​ரத் தேவை அதி​கரித்து மின்​வெட்​டுப் பிரச்​சினை நிலவி வரும் சூழலில் மின் வாரி​யத்​தின் சில முடிவு​கள், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் உயர் அழுத்த நுகர்​வோர் மத்​தி​யில் கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

குறிப்​பாக, மாநிலம் முழு​வதும் ஒரு மெகா​வாட்க்கு மேல் மின்​சா​ரம் பயன்​படுத்​தும் 10 ஆயிரம் உயர் அழுத்த மின்​நுகர்​வோர் உள்​ளனர். இவர்​களுக்கு வெளிச்​சந்​தை​யில் மின்​சா​ரம் வாங்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மின்​சார கொள்​முதலுக்கு நிலை ஆணை அனு​மதி அளித்து வந்த எஸ்​.எல்​.டி.சி எனப்​படும் ‘மாநில மின் சுமை நுகர்வு மையம்’ கடந்த ஜூன் மாதம் முதல் அதற்​கான அனு​ம​தியை வழங்​காமல் காலம் தாழ்த்தி வரு​கிறது.

இதனால் இந்​திய எரிசக்தி பரி​மாற்​றம் மூலம் வெளிச்சந்​தைகளில் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய முடி​யாமல் உயர் அழுத்த மின் நுகர்​வோர் திணறி வரு​கின்​றனர். இந்த அனு​ம​தியை விரைந்து வழங்க வேண்​டும் என அவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

அதே​போல், புதிய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் திட்​டங்​களுக்​கான விண்​ணப்​பங்​கள் கடந்த மார்ச் முதல் வழங்​கப்​பட​வில்லை. மேலும், முடிவடைந்த 1,000 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திட்​டங்​களும் மின்​சார கட்​டமைப்​புடன் இணைக்​கப்​ப​டா​மல் காத்​திருக்​கின்​றன.

இதுகுறித்து மின்​வாரிய உயர் அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “பு​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் திட்​டங்​களுக்​கான விண்​ணப்​பங்​களைப் பெற புதிய இணை​யதளத்தை உரு​வாக்கி வரு​கிறோம். அடுத்த மாதம் அவை செயல்​பாட்​டுக்கு வந்​தவுடன் புதிய விண்​ணப்​பங்​கள் ஏற்​கப்​படும்” என்​றார். உயர் அழுத்த மின்​நுகர்​வோருக்கு அனு​மதி வழங்​கப்​ப​டாதது குறித்த கேள்விக்கு அவர்​ பதிலளிக்​க மறுத்​து​விட்​டார்​.

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்குக: உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகல கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in