தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்: சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்: சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: தவெக வேட்​பாளரை தாக்​கிய​தாக பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்கோரி முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த ஏப்​.23-ம் தேதி நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​தி​வின்​போது சென்னை துறை​முகம் தொகுதி தவெக வேட்​பாளர் சினோரா அசோக்​கை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் முன்​னாள் அமைச்​ச​ர் சேகர்​பாபு மீது சென்னை வடக்கு கடற்​கரை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

தனக்கு எதி​ரான இந்த வழக்கை ரத்து செய்​யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சேகர் ​பாபு மனு தாக்​கல் செய்​திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, சேகர்​பாபு தரப்​பில், ‘‘சம்​பவம் நடந்து 29 நாட்​களுக்​குப் பிறகு, தவெக அரசு பொறுப்​பேற்ற பின்​னர் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. புகாரில் கூறி​யிருப்​பது போல எந்த சம்​பவ​மும் நடை​பெற​வில்லை என்​ப​தால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்​டும்’’ என வாதிடப்​பட்​டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி, மனு​தா​ரர் மீதான வழக்கை ரத்​துசெய்ய எந்த முகாந்​திர​மும் இல்லை எனக்​கூறி, சேகர்​பாபு​வின் மனுவை தள்​ளு​படி செய்​யப்​போவ​தாக தெரி​வி்த்​தார்.

அப்​போது சேகர்​பாபு தரப்​பில் மனுவை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி, இந்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளார்​.

தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்: சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
செங்கோட்டையன் அடக்கி வாசிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in