துணிச்சலாக செயல்பட்டதாக பெண் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்ட நீதி​மன்றத்தின் துணிச்​சலான பெண் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதி​மன்​றம் பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஜனவரி மாதம் மதுரை 5-வது நீதித்​துறை நடு​வர் நீதி​மன்ற நீதிபதி முன் வழக்கு விசா​ரணைக்​காக ஒரு நபர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அப்​போது மதுரை வழக்​கறிஞர் சங்க நிர்​வாகி​கள் மற்​றும் சில வழக்​கறிஞர்​கள் சேர்ந்து நீதி​மன்ற நடவடிக்​கைகளுக்கு இடையூறு செய்​தனர் என்​றும், இந்​தச் சம்​பவத்​தில் வழக்​கறிஞர்​கள் ஒரு​மை​யில் பேசி நீதி​மன்​றத்​தின் மாண்​பைக் குலைக்​கும் வகை​யில் நடந்​து​கொண்​ட​தாக தெரிகிறது. இதுகுறித்து நீதிபதி தனது அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதனால் நீதி​மன்​றப் பணி​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டு, நீதிபதி தனது இருக்​கையி​லிருந்து எழுந்து செல்​லும் நிலை ஏற்​பட்​டது. இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர்​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்​கான நோட்​டீஸை அந்த நீதிபதி பிறப்​பித்​தார். இதை எதிர்த்து வழக்​கறிஞர்​கள் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுதாக்​கல் செய்​தனர். இந்த மனு நீதிபதி விக்​டோரியா கெளரி முன் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், தங்​கள் மீதான குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை என்றும் இந்த விவ​காரத்தை சுமுக​மாகப் பேசித் தீர்க்​கத் தயா​ராக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: இந்த வழக்கை பொறுத்​தவரை, கண்​ணி​யத்​தை​யும் அதி​காரத்​தை​யும் நிலைநிறுத்த, வழக்​கறிஞர்​களின் அனுபவம் அல்​லது பதவியைக் கண்டு அஞ்​சாமல், சட்​டத்​தின் மாண்​பைக் காக்க துணிச்​சலுடன் செயல்​பட்ட இளம் நீதிப​தி​யான லட்​சுமி பிரி​யா​வின் மனஉறு​தியை இந்த நீதி​மன்​றம் பாராட்​டு​கிறது.

வழக்​கறிஞர்​கள் நீதி​மன்ற அதி​காரத்தை மீறி அழுத்​தம் கொடுக்க முயன்​றால், அதை ஏற்க முடி​யாது. மாவட்ட நீதித்​துறை நீதி வழங்​கல் அமைப்​பின்முது​கெலும்​பாகும். சாதாரண குடிமகன் முதலில் அணுகு​வது இந்த நீதி​மன்​றங்​களைத் தான். எனவே, நீதி​மன்​றத்​தின் கண்​ணி​யத்​தை​யும் கவுர​வத்​தை​யும் பேணுவது வழக்​கறிஞர்​களின் கடமை.

நீதி​மன்​றத்​தில் நடந்த சம்​பவம் குறித்து சிசிடிவி காட்​சிகள் போன்ற முதற்​கட்ட ஆதா​ரங்​கள் உள்ள நிலை​யில், இந்த கட்​டத்​தில் வழக்கை ரத்து செய்ய முடி​யாது எனக்​கூறி அனைத்து மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

Santhanakoodu Festival
முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார்: 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in