சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் - பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வால் பயணிகள் அவதி
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் - பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்
Updated on
1 min read

சென்னை: பொங்​கல் விடு​முறை முடிந்து லட்​சக்​கணக்​கானோர் சென்னை திரும்​பிய​தால் சென்னை புறநகர் பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. ஆம்னி பேருந்​துகளில் கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டது.

பொங்​கல் பண்​டிகையை சொந்த ஊரில் கொண்​டாட சென்​னை​யில் இருந்து 18 லட்​சம் பேர் புறப்​பட்​டுச் சென்​றனர். இந்​நிலை​யில் பொங்​கல் விடு​முறை முடிந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் ஏராள​மானோர் திரும்​பத் தொடங்​கினர். நேற்று தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, விருதுநகர், மதுரை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் சென்​னைக்​குத் திரும்​பத் தொடங்​கினர். இதனால், இந்த மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்கு இயக்​கப்​பட்ட அனைத்து ரயில்​களி​லும் ஏற்​கெனவே நிரம்பி​யிருந்​தது. சிறப்பு ரயில்​களி​லும் காத்​திருப்​போர் பட்​டியல் அதி​க​மாக இருந்​தது.

இதையொட்டி முக்​கிய ரயில் நிலை​யங்​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டிருந்​தது. ரயில்​களில் இடம் கிடைக்​காதவர்​கள் பேருந்​துகளில் பயணம் செய்ய திட்​ட​மிட்டு அரசு, தனி​யார் பேருந்​துகளில் டிக்​கெட் முன்​ப​திவு செய்​தனர். இதற்​காக போக்​கு​வரத்து துறை சார்​பில் நேற்று மட்​டும் 3,100 பேருந்​துகள் கூடு​தலாக இயக்​கப்​பட்​டன. மேலும் கார்​கள் உள்​ளிட்ட தனி வாக​னங்​கள் மூல​மாக​வும் பலர் சென்​னைக்கு திரும்​பினர்.

இந்​நிலை​யில், தென்​மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சென்​னைக்கு வாக​னங்​கள் படையெடுத்​த​தால், செங்​கல்​பட்டு அருகே பரனூர் சுங்​கச்சாவடி பகு​தி​யில் நேற்று காலை முதல் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதுத​விர சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில், மறைமலை நகர், கூடு​வாஞ்​சேரி, கிளாம்​பாக்​கம், பெருங்​களத்​தூர், தாம்​பரம் உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களி​லும் ஓஎம்​ஆர், ஈசிஆரிலும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் இன்று காலை வரை செங்​கல்​பட்டு மாவட்ட மற்​றும் சென்னை மாநகர போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீரமைக்​கும் பணி​களில் ஈடு​பட்​டனர்.

கட்​ட​ணம் உயர்வு: பொங்​கல் விடு​முறை முடிந்து சென்னை மற்​றும் பெங்​களூரு செல்​லும் ஆம்னி பேருந்​துகளில் கட்​ட​ணம் 3 மடங்கு வரை அதி​கரித்​துள்​ளது. பண்​டிகை காலம் என்​ப​தால் மக்​களும் வேறு​வழி​யின்றி இந்த கட்​ட​ணத்தை கொடுக்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டனர்.

கோயம்​புத்​தூரில் இருந்து சென்​னை, பெங்​களூரு​வுக்கு இருக்கை வசதி மட்​டும் கொண்ட பேருந்​துகள் குறைந்​த​பட்​சம் ரூ.2000 முதல் ரூ.4,000 வரை விற்கப்​படு​கின்​றன. படுக்கை வசதி​யுடன் கூடிய பேருந்​துகளில் ரூ.3500-ல் இருந்து ரூ.7500-க்​கும் டிக்​கெட் விற்​கபட்​டது. அதே​போல, மதுரையி​லிருந்து சென்​னைக்கு ரூ.2,500 முதல் ரூ.6,000 வரை​யும் திருச்​சியி​லிருந்து சென்​னைக்கு ரூ.1,800 முதல்​ ரூ.3,500 வரை​யும்​ டிக்​கெட்​டு​கள்​ விற்​கப்​பட்​டன.

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் - பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்
சென்னை மெரினாவில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in