டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 1.40 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 1.40 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின

Published on

நாகப்பட்டினம்: ‘டிட்​வா’ புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு முதல் இடை​வி​டாது கனமழை பெய்து வரு​கிறது. இதனால் சுமார் 1.40 லட்​சம் ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த சம்​பா, தாளடி பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ளன. தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 31.20 செ.மீ. மழை பதி​வானது.

தென்​மேற்கு வங்​கக் கடல் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் உரு​வான ‘டிட்​வா’ புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, மயி​லாடு​துறை, காரைக்​கால் மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு தொடங்கி இடை​வி​டாது கனமழை பெய்து வரு​கிறது. மேலும், ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டிருந்த நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் நேற்று அதி​க​னமழை பெய்​தது. இதனால், பல்​வேறு இடங்​களில் குடி​யிருப்​பு​களில் மழைநீர் சூழ்ந்​துள்​ளது. பொது​மக்​கள் வீடு​களில் முடங்​கினர்.

நாகை மாவட்​டத்​தில் சுமார் 60 ஆயிரம் ஏக்​கரிலும், திரு​வாரூர் மாவட்​டத்​தில் 50 ஆயிரம் ஏக்​கரிலும், மயி​லாடு​துறை​யில் 30 ஆயிரம் ஏக்​கரிலும், தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் 2 ஆயிரம் ஏக்​கரிலும் சாகுபடி செய்​யப்​பட்​டுள்ள சம்​பா, தாளடிப் பயிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது.

புயல் சின்​னம் காரண​மாக நாகை, வேளாங்​கண்​ணி, தரங்​கம்​பாடி, பூம்​பு​கார், பழை​யாறு உள்​ளிட்ட பகு​திகளில் கடல் மிகுந்த சீற்​றத்​துடன் காணப்​பட்​டது. முன்​னெச்​சரிக்கை மற்​றும் மீட்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​வதற்​காக மாநில பேரிடர் மீட்​புப் படை​யினர், தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் சீர்​காழி, தரங்​கம்​பாடி, நாகை உள்​ளிட்ட பகு​தி​களில் முகாமிட்​டுள்​ளனர். மேலும், அந்​தந்த மாவட்ட கண்​காணிப்பு அலு​வலர்​கள், ஆட்​சி​யர்​கள் பாது​காப்​புப் பணி​களை மேற்கொண்டு வரு​கின்​றனர்.

5-ம் எண் புயல் கூண்டு: கனமழை காரண​மாக நாகை, மயி​லாடு​துறை, காரைக்​கால், தஞ்​சாவூர் மாவட்ட மீனவர்​கள் மறு உத்​தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்​கச் செல்ல வேண்​டாம் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதனால், மீன்​பிடித் துறை​முகங்​கள், கடற்​கரைகளில் விசைப்​படகு​கள், நாட்​டுப் படகு​ களை பாது​காப்​பாக மீனவர்​கள் நிறுத்தி வைத்​துள்​ளனர். மேலும், வடக்கு நோக்கி புயல் கடந்து செல்​லும் என்​ப​தைக் குறிக்​கும் வகை​யில் நாகை மற்​றும் காரைக்​கால் துறை​முகங்​களில் நேற்று 5-ம் எண் புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டது.

நேற்று பிற்​பகல் நில​வரப்​படி தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை பகு​தி​யில் 31.20 செ.மீ. மழை அளவு பதி​வாகி​யுள்​ளது. இதே​போல, தோப்​புத்​துறை​யில் 20 செ.மீ., திருப்​பூண்​டி​யில் 20 செ.மீ., வேளாங்​கண்​ணி, வேதா​ரண்​யத்​தில் தலா 18 செ.மீ, நாகை​யில் 17 செ.மீ. மழை பதி​வாகி இருந்​தது. சென்​னை, எண்​ணூர், கடலூர், காட்​டுப்​பள்​ளி, புதுச்​சேரி, பாம்​பன், தூத்​துக்​குடி ஆகிய 7 துறை​முகங்​களில் 4-ம்​ எண்​ புயல்​ எச்​சரிக்​கை கூண்​டு ஏற்​றப்பட்​டுள்​ளது.

விவசாயிகள் கோரிக்கை: ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 1.40 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின
சென்னையை நெருங்கியது ‘டிட்வா’ புயல்; திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’ - 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in