சென்னை, புறநகரில் நள்ளிரவில் பெய்த கனமழை

சென்னை, புறநகரில்  நள்ளிரவில் பெய்த கனமழை
Updated on
1 min read

சென்னை​: மாநகர் மற்​றும் சென்னை புறநகர் பகு​தி​களில் நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் கனமழை பெய்​தது. இதனால் பல இடங்​களில் சாலைகளில் மழைநீர் தேங்​கியது.

சென்​னை, புறநகர் பகு​தி​களில் நேற்று முன்​தினம் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் சென்​னை, புறநகரில் நேற்று முன்​தினம் காலை முதலே கடும் வெயில் நில​வியது. இதனால் பொது​மக்​கள் முக்​கியப் பணி​களை முடிக்க வெளி​யில் செல்ல முடி​யாமல் மாலை நேரத்​தில் வெளி​யில் சென்​றனர்.

பேருந்து மற்​றும் மின்​சார ரயிலுக்​காக காத்​திருந்த பொது​மக்​கள் கடும் புழுக்​கத்​தால் அவதிக்​குள்​ளாகினர். புறநகர் ரயில்​களில் அனல் காற்று வீசி​யது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​தது.

இதனால் அதி​காலை வேலை​யில் சென்​னை, புறநகர் பகு​தி​களில் குளிர்ச்​சி​யான சூழல் நில​வியது. கனமழை​யால், கோயம்​பேடு சந்​தைக்கு நுழை​யும் பகு​தி​களில் மழைநீர் தேங்​கிய​தா​லும், சந்தை வளாகம் முழு​வதும் சேறும் சகதி​யு​மாக மாறி வியா​பாரி​கள், பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர்.

கொட்​டித் தீர்த்த கனமழை​யால் மறைந்த பாக்​ய​ராஜ் இல்​லம் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. திரு​வான்​மியூர், காம​ராஜர் நகர் கலாஷேத்ரா சாலை, சேத்​துப்​பட்டு சுரங்​கப்பாலம் உள்​ளிட்ட பல்​வேறு சாலைகளில் மழைநீர் தேங்​கிய​தால், வாகன ஓட்டிகள் சிரமத்​துக்​குள்​ளாகினர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம் தேர்​வாய் கண்​டிகை ஏரி​யில் 8 செமீ, சென்னை கொரட்​டூர், அயப்​பாக்​கம், வளசர​வாக்​கம், நெற்​குன்​றம், திரு​வள்​ளூர் மாவட்​டம் தாமரைப்​பாக்​கம், ஊத்​துக்​கோட்​டை, புழலில் தலா 6 செமீ, மழை பதி​வாகி​யுள்​ளது.

சென்னை, புறநகரில்  நள்ளிரவில் பெய்த கனமழை
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in