ஆந்திராவில் பலர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உண்ணி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அவசியம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதற்​கான வழி​காட்​டு​தல்​களை மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ரிக்​கட்​ஸியா எனப்​படும் பாக்​டீரியா பாதித்த ஒட்​டுண்​ணி​கள், பூச்​சிகள், உயி​ரினங்​கள் மனிதர்​களை கடிக்​கும்​போது, அவர்​களுக்கு ஸ்கரப் டைபஸ் காய்ச்​சல் ஏற்​படு​கிறது. காய்ச்​சல், தலை​வலி, உடல் சோர்வு மற்​றும் தடிப்​பு​கள் அதன் முக்​கிய அறிகுறிகளாக உள்​ளன. தமிழகத்​தில் சென்​னை, காஞ்​சிபுரம்,

திருப்​பத்​தூர், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, ராணிப்​பேட்​டை, வேலூர் ஆகிய பகு​தி​களில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பாதிப்பு இருந்து வரு​கிறது. இவைத​விர கிழக்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​கள், மேற்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​களி​லும் ஸ்கரப் டைபஸ் தொற்று காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலத்​தில் அந்த பாதிப்பு அதி​கரித்து வரு​வ​தால் சென்னை மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் நோய் பரவல் ஏற்​படலாம் என அஞ்​சப்​படு​கிறது.

இதையடுத்​து, அதற்​கான தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. விவ​சா​யிகள், புதர் மண்​டிய மற்​றும் வனப்​பகு​தி​களுக்கு அருகே வசிப்​பவர்​கள், மலை​யேற்​றத்​தில் ஈடு​படு​வோர், கர்ப்​பிணி​கள், பூச்​சிக் கடிக்​குள்​ளாகும் சூழலில் இருப்​போருக்கு இந்த பாதிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ளன.

எலிஸா ரத்த பரிசோதனை மற்​றும் மூலக்​கூறு பரிசோதனை​கள் மூல​மாக இந்த நோயை கண்​டறிய முடி​யும். ஸ்கரப் டைபஸ் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அசித்​ரோமைசின், டாக்​ஸிசைக்​ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்​துகளை அளித்து சிகிச்சை அளிக்க வேண்​டும்.

இந்த பாதிப்​புக்கு கடந்த ஆண்​டில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். நடப்​பாண்​டில் 4,000-க்​கும் அதி​க​மானோருக்கு பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ளது. தற்​போது, 10 முதல் 20 பேர் வரை தின​மும் பாதிப்பு அறிகுறிகளு​டன் மருத்​து​வ​மனைக்கு வரு​கின்​றனர்.

மலைப்​பகு​தி​கள், புதர்ப்​பகு​தி​கள் மட்​டுமின்றி சமவெளி பகு​தி​களி​லும் அந்த பாதிப்பு கண்​டறியப்​படு​கிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அனைத்து மாவட்ட சுகா​தார அதி​காரி​களுக்​கும் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in