பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை தயா​ரிப்பு மற்​றும் விற்​பனைக்கு தடை விதித்து மாநக​ராட்சி பிறப்​பித்த உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது.

மதுரை மாட்​டுத்​தாவணியைச் சேர்ந்த வேல​ராம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: ராஜஸ்​தானில் இருந்து 12 ஆண்​டு​களுக்கு முன்பு குடும்​பத்​துடன் வேலை​வாய்ப்​புக்​காக மதுரை வந்து சிலை​கள் தயா​ரித்து விற்​பனை செய்து வரு​கி​றோம். சிலை​களை தயா​ரிக்க சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பொருட்​களை பயன்​படுத்தி வரு​கி​றோம். விநாயகர் சதுர்த்தி போன்ற மத விழாக்​களின்​போது தெய்​வங்​களின் சிலை விற்​பனை அதி​க​மாக நடை​பெறும். மற்ற நாட்​களில் விற்​பனை அவ்​வள​வாக இருக்​காது.

இந்​தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்​னிட்டு சிலை தயா​ரிப்பு பணி​யில் தீவிர​மாக இருந்​த​போது மதுரை மாநக​ராட்சி நகர சுகா​தார அலு​வலர் மாநக​ராட்சி அனு​ம​தி​யில்​லாமல் தொழில் செய்​வ​தாகக் கூறி, விளக்​கம் ​கோரி அக். 6-ல் நோட்​டீஸ் அனுப்​பி​னார். மேலும் 7 நாட்​களில் மாநக​ராட்​சியை அணுகி உரிய கட்​ட​ணம் செலுத்தி உரிமம் பெற​வும் கூறப்​பட்​டது. இதையடுத்து மாநகராட்​சிக்கு சென்றபோது அதி​காரிகளை சந்​திக்க அனு​மதிக்கவில்​லை.

இந்​நிலை​யில் 7 நாள் அவகாசம் முடிவதற்​குள் நாங்​கள் சிலை செய்து கொண்​டிருந்த வளாகத்தை பூட்டி அதி​காரி​கள் சீல் வைத்​தனர். இதற்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தேன். இந்த வழக்கில் எந்த நிபந்​தனை​யும் விதிக்​காமல் உரிமம் வழங்க வேண்​டும் என மாநக​ராட்​சிக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதனிடையே செப்.3-ல் சிலை​களை செய்ய பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மாகூல் ஆகியன பயன்​படுத்​தக் கூடாது என்ற நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்டு தற்​காலிக உரிமம் வழங்​கப்​பட்​டது.

சிலை​கள் தயா​ரிக்க 90 சதவீதம் ஜிப்​சம் பயன்​படுத்​தப்​படு​கிறது. சிலை​களின் பல்​வேறு பாகங்​களை இணைப்​ப​தற்​கும், உடை​யாமல் இருப்​ப​தற்​கும் குறைந்​தளவு பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் பயன்​படுத்​தப்​படு​கிறது. எனவே, சிலை​களை தயா​ரிக்க பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் பயன்​படுத்​தக் கூடாது என்ற நிபந்​தனையை நீக்​க​வும் தொழிலில் மாநக​ராட்சி அதி​காரி​கள் தலை​யிடக் கூடாது என்​றும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி எல்​.விக்டோரியா கெளரி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி,பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் பயன்​படுத்தி சிலை தயா​ரிக்​கக் கூடாது என்ற நிபந்​தனைக்கு இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது. சிலை விற்​பனைக்கு அனு​மதி வழங்​கப்​படு​கிறது என விசா​ரணையைத் தள்ளிவைத்தார்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
69-வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in