குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸார் சஸ்பெண்ட்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

திருவாரூர்: திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள அத்​திக்​கடை பகு​தி​யில் பெட்​டிக்​கடைநடத்தி வருபவர் பாஸ்​கர். இவர் குட்கா விற்​பனை செய்​த​தாக கூத்​தாநல்​லூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்தனர்.

இதில், குட​வாசலில் பணி​யாற்​றும் தனிப்​படை தலை​மைக் காவலர் மனோகரன், நன்​னிலம் காவல் நிலைய தலை​மைக் காவலர் பார​தி​ராஜா ஆகியோ​ருக்​கு, கடந்த 2 ஆண்​டு​களாக பலமுறை பணம் அனுப்​பி​யிருந்​தது தெரிய​வந்​தது. மேலும், உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி ஒரு​வருக்​கும் பணம் அனுப்​பப்​பட்​டிருந்தது.

இதையடுத்​து, தலை​மைக் காவலர்​கள் மனோகரன், பார​தி​ராஜா ஆகிய இரு​வரை​யும் பணி​யிடைநீக்​கம் செய்து எஸ்பி சதீஷ்கு​மார் நேற்று உத்​தர​விட்​டார். மேலும், உணவு பாது​காப்​புத் துறை அலு​வலர் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை அதி​காரிக்கு பரிந்​துரை செய்​தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in