தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்

தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்
Updated on
1 min read

பழநி: தமிழகத்​தில் கள்ளுக்கடைகளை திறப்​பது தொடர்​பாக அரசு ஆய்வு செய்​து வரு​வதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டாஸ்​மாக் ஊழியர்​களின் பிரச்​சினை​களைச் சரிசெய்ய அரசு முனைப்​புடன் செயல்​படு​கிறது. டாஸ்​மாக் ஊழியர்​கள் மீது அரசுக்கு எந்த வெறுப்​பும் இல்​லை.

தமிழகம் முழு​வதும் மக்​களுக்கு இடையூறாக உள்ள டாஸ்​மாக் கடைகள் இடமாற்​றம் செய்​யப்​படும். பக்​தர்​கள் புனித நீராடும் பழநி சண்​முகந​தியை ரூ.1.75 கோடியில் சீரமைக்​கப்​படும்.

தமிழகத்​தில் கள்​ளுக்​கடைகளைத் திறப்​பது தொடர்​பாக சாதக, பாதகங்​கள் குறித்து அறிக்​கை​யாகத் தயாரித்து முதல்​வரிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கள்​ளுக்​கடைகளைத் திறப்​பது தொடர்​பாக ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு கூறி​னார்.

தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்
"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in