

சென்னை: சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வாகும் எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் தனி உதவியாளர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி கடந்த 12-ம் தேதி பேசியபோது, ‘‘எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்ய வாகனம் (கார்), தனி உதவியாளர் போன்ற வசதிகளை அரசு செய்துதர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்து பேசும்போது, ‘‘எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்’’ என்று தெரிவித்தார்.
பின்னர், எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கை மனுவை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு பேரவைத் தலைவர் பிரபாகர் அனுப்பினார். அதன் அடிப்படையில், லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிசெய்ய சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வாகும் எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நடப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.