முதல்வரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது அரசு மருத்துவர் புகார்

ஆ.ராசா | கோப்புப்படம்
ஆ.ராசா | கோப்புப்படம்
Updated on
1 min read

பெரம்பலூர்: ​முதல்​வர் விஜய் குறித்து இழி​வாக பேசி​ய​தாக திமுக எம்​.பி. ஆ.ராசா மீது பெரம்​பலூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் அரசு மருத்​து​வர் புகார் அளித்​துள்​ளார்.

பெரம்​பலூர் மாவட்​டம் அம்​மா​பாளை​யம் அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வருபவர் ராசா மணி​கண்​டன். இவர் திமுக துணை பொதுச் செய​லா​ள​ரும், நீல​கிரி எம்​.பி.​யு​மான ஆ.ராசா மீது பெரம்​பலூர் எஸ்​.பி. லலித்​கு​மாரிடம் நேற்று முன்​தினம் புகார் மனு ஒன்றை அளித்​துள்​ளார்.

அந்த மனு​வில் தெரி​வித்​திருப்​ப​தாவது: திரு​வாரூர் கலைஞர் கோட்​டத்​தில் கடந்த ஜூன் 25-ம் தேதி முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன்இல்​லத் திருமண விழா​வில் முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஆ.ரா​சா, முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக பேசி​ உள்​ளார். இது முதல்​வர் பதவி​யின் கண்​ணி​யத்​தை​யும், மரி​யாதையை​யும் இழி​வுபடுத்​து​வ​தாக உள்​ளது. ஒரு எம்​.பி. பொது வெளி​யில் இப்​படி பேசி​யிருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

எனவே அவர் மீது பெரம்​பலூர் போலீ​ஸார் சட்​டப்​படி வழக்​குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மனு​வில் கூறி​யிருந்​தார். ஆனால், இந்த மனு மீது இது​வரை வழக்​குப் பதிவு செய்​யப்​பட​வில்லை என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

ஆ.ராசா | கோப்புப்படம்
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” - ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in