வண்டலூர்: அரசு பேருந்து, பைக் மோதி பள்ளி, கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

வண்டலூர்: அரசு பேருந்து, பைக் மோதி பள்ளி, கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

வண்டலூர்: வரத​ராஜபுரம், ஜெயலட்​சுமி தெரு​வைச் சேர்ந்​தவர் தனசிங் (71). இவரது பேத்தி காவ்யா (11) மண்​ணி​வாக்​கம் அரசு பள்ளி​யில் 7-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை தனசிங், காவ்​யாவுடன் பைக்கில் வண்​டலூர் - முடிச்​சூர் சாலை, நடேசன் பள்ளி அருகே வந்​த​போது பின்​னால் வந்த அரசு பேருந்து மோதி​யது. காவ்யா நிலை தடு​மாறி விழுந்​தார். பேருந்​தின் பின் சக்​கரம் உடல் மீது ஏறியதில் அங்கேயே காவ்யா உயி​ரிழந்​தார். தனசிங் சிறு காயங்களு​டன் உயிர் தப்​பி​னார்.

இதையடுத்து ஓட்டுநர் பெருமாள் (44) கைது செய்யப்பட்டார். படப்பை, கலைஞர் நகர் முரளி ராஜனின் மகள் கவுசிகா (20). தனியார் பல்​கலை​யில் 2-ம் ஆண்டு பி.எல். படித்து வந்​தார். கல்லூரி முடிந்து தன் மின்​- ஸ்கூட்​டரில் வீடு திரும்​பிக் கொண்டிருந்தார்.

வண்​டலூர் ஏரி அரு​கே, வாலாஜா ​பாத் சாலை​யில் வந்​த​ போது எதிரே வந்த பைக் மோதியதில் கவுசிகா உயிரிழந்தார். இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்த சரவணன் (51) காயமடைந்​தார்.

வண்டலூர்: அரசு பேருந்து, பைக் மோதி பள்ளி, கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு
விதிகளை மீறி பயன்படுத்திய 20 மின் மோட்டார்கள் பறிமுதல்: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in