4 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசித்த ஆளுநர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசித்த ஆளுநர்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் எவ்​வித மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக வாசித்​தார். கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் ஆளுந​ராக இருந்த ஆர்​.என்​.ர​வி, 2023-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில், அரசு தயாரித்த உரை​யில் சில​வற்றை தவிர்த்​தும், சில தகவல்​களை சேர்த்​தும் வாசித்​தார்.

அதன்​பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்​டு​களில் பேர​வைக் கூட்​டத்​தின் தொடக்​கத்​தில் தேசிய கீதம் இசைக்​கப்​பட​வில்லை என்று அதிருப்தி தெரி​வித்​து, தனது உரையை வாசிக்​காமல் வெளி​யேறி​னார். இவ்​வாறு கடந்த 4 முறை​யாகவே அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் முழு​மை​யாக படிக்​க​வில்​லை.

இதற்​காக தீர்​மானம் கொண்​டு​வந்​து, அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையே அவைக்​குறிப்​பில் பதிவு செய்​யப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் நேற்று தொடங்​கியது. இதில் தற்​போதைய பொறுப்பு ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தனது உரையை முழு​மை​யாக வாசிப்​பாரா என்ற சந்​தேகம் எழுந்​தது.

ஆனால், நேற்​றைய கூட்​டத்​தில் தமிழக அரசு தயாரித்த உரையை எவ்​வித மாற்​ற​மும் இன்றி ஆளுநர் அர்​லேகர் முழு​மை​யாக வாசித்​தார். பதவி​யேற்பு விழாக்​களில் மத்​திய அரசு அறி​வுறுத்​தலின்​படி, வந்தே மாதரம், தேசிய கீதத்தை தொடர்ந்து 3-வ​தாக தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது சர்ச்​சை​யானது.

இந்த நிலை​யில், ஆளுநரின் வேண்​டு​கோளை ஏற்​று, கூட்​டத் தொடரின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் இசைக்​கப்​பட்​ட​தால், 4 ஆண்​டு​கால பிரச்​சினை சுமுக​மாக முடிவுக்கு வந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இதுதொடர்​பாக, ஆளுநர் அர்​லேகர் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் புதிய உதயம் தோன்​றிய நாள் இன்று (ஜூன் 18) என்​பதை மகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

சில ஆண்​டு​களுக்​குப் பிறகு ஆளுநரின் முழு உரை​யும் எவ்​வித இடையூறும் இன்​றி, சட்​டப்​பேர​வை​யில் வாசிக்​கப் பெற்​றது மனநிறை​வைத் தரு​கிறது. முதல்​முறை​யாக பேர​வை​யில் ஆளுநர் உரை​யின் தொடக்​கத்​தி​லும், நிறை​வாக​வும் தேசிய கீதம் பாடப்​பட்ட சரித்​திர நிகழ்வு நடை​பெற்​றுள்​ளது.

தமிழக அரசு மற்​றும் மக்​கள் மாளிகை இடையே இணக்​க​மான சூழல் நிலவ வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பை பூர்த்தி செய்​து, மக்​களாட்​சி​யின் மாண்பை நிலை​நாட்​டும் வித​மாக இது அமைந்​துள்​ளது.

ஒரு ஜனநாயக ஆட்​சி​யானது, ஒருங்​கிணைந்த, இணக்​க​மான உறவை அனைத்து தரப்​பிலும் நிலை​நாட்​டி, மக்​களின் தேவை​களைப் பூர்த்தி செய்​வதையே நிலை​யான, முன்​னு​தா​ரண​மான நோக்​க​மாகக் கொண்டு செயல் பட வேண்​டும். அந்த இலக்கை நோக்கி நாம் அனை​வரும் இணைந்து பயணிக்​கத் தொடங்கி இருப்​பது மனதுக்கு நிறை​வைத்​ தரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

4 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசித்த ஆளுநர்
தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்திய கேரள இளைஞர்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in