

கோப்புப் படம்
சென்னை: தனியார் பேருந்துகளை தொலைதூர சேவைக்கு பயன்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசுப் பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தது. அதன்படி, பேருந்துகள் மட் டும் தனியாரிடம் இருந்து வாங்கப்படும். ஓட்டுநர், நடத்துநர்போக்குவரது கழகம் நியமிக்கும்.
பேருந்து பராமரிப்பை தனியார் பேருந்து உரிமையாளர்கள் செய்வர். இந்நிலையில் தனியார் பேருந்துகளை தொலைதூரசேவைக்கு பயன்படுத்த அதாவது அரசு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தொலைதூர வழித்தடங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களாக உள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களுக்குள்ளும் சில நூறு கிலோ மீட்டருக்கு உள் ளாக திறந்த வழித்தடம் இருக்கும், திருச்சி - பெரம்பலூர், விழுப்புரம் - திருச்சி, மதுரை -திருமங்கலம் போல அந்த திறந்த பாதையின் எல்லைக்குள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படும்.
தேசிய மயமாக்கப்பட்டவழித்தடங்களில் அரசு பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும். தனியார் பேருந்துகளில் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் தனி விதிமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தேசிய வழித்தடத்தை பயன்படுத்த அனுமதி உண்டு, சாதாரண தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து 30 நாட்கள்பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வரைவு அறிக்கை ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால் பண்டிகை காலங்களிலும் சூரசம்காரம் போன்ற விழாக்களின் போதும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து அரசு சார்பில் தனியார்பேருந்துகளை தொலைதூர சேவைக்கு பயன்படுத்த முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.