ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி தங்க நகைகள் பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: உரிய ஆவணங்​கள் இன்றி பிரபல நகைக் கடைக்கு கொண்டு செல்​லப்​பட்ட ரூ.18 கோடி மதிப்​பு நகைகளை தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர். சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு நாளை மறு​நாள் நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் செய்து வரு​கிறது.

பிரச்​சா​ரம் இன்று முடிவடைய உள்ள நிலை​யில், தேர்​தல் பறக்​கும் படை​யினர் தங்​கள் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். சென்னை பூக்​கடை ஏழு கிணறு பகு​தி​யில் நேற்று காலை தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக வந்த வாக​னம் ஒன்றை நிறுத்தி ஓட்​டுநரிடம் விசா​ரித்​தனர். அவர் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால் வாக​னத்​தில் சோதனை நடத்​தினர்.

அதில் ரூ.18 கோடி மதிப்​புள்ள சுமார் 12 கிலோ 760 கிராம் தங்க நகைகள் இருந்​தது தெரிய​வந்​தது. இதையடு​தது, ஓட்​டுந​ரான பரங்​கிமலை​யைச் சேர்ந்த கிரண் (30) என்​பவரை தனி​யாக அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

அவர், தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி செய்து வரு​வ​தாக​வும், பல்​லா​வரத்​தில் இருந்து ராயபுரம் பகு​தி​யில் உள்ள பிரபல நகைக்​கடை​யில் நகைகளை கொடுத்து விட்டுவேறு ஒரு கடைக்கு நகைகளை கொண்டு செல்​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

ஆனால், அவரிடம் அந்த நகைகளுக்​கான ஆவணங்கள் இல்​லை. இதையடுத்து அந்த நகைகளை தேர்​தல் பறக்​கும்​ படை​யினர் பறி​முதல் செய்​தனர். பின்​னர், அதை வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். உரிய ஆவணங்​களை காண்​பித்து நகைகளை பெற்​றுச் செல்​லும்​படி வாகன ஓட்​டுந​ரான கிரனுக்கு அறி​வுரை வழங்கி அவரை பறக்​கும்​படை​யினர் அனுப்பி வைத்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
2-வது ஒரு​நாள்: 6 விக்கெட்கள் வித்தி​யாசத்​தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது நியூஸிலாந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in