

அரூர்: இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் சமீப காலமாக பொது மேடைகளில் தரக்குறைவான பேச்சுகள், தனி மனிததாக்குதல், ஆபாசப் பேச்சுகள் அதிகரித்து வருகிறது. இது நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்புடையது அல்ல. யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.