பழநி மலைக் கோயிலுக்கு எளிதில் செல்ல ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் திட்டம்: தமிழக அரசு அனுமதி

பழநி மலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஃபனிகுலர் வின்ச் ரயிலின் மாதிரி.

பழநி மலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஃபனிகுலர் வின்ச் ரயிலின் மாதிரி.

Updated on
1 min read

பழநி: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைக் கோயிலுக்​குப் பக்​தர்​கள் எளி​தில் செல்ல ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் திட்​டத்​தைச் செயல்​படுத்த தமிழக அரசு அனு​மதி அளித்​துள்​ளது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் தரைமட்​டத்​தில் இருந்து 450 அடி உயரத்​தில் உள்​ளது. பக்​தர்​கள் 694 படிகளைக் கடந்து கோயிலுக்​குச் செல்ல வேண்​டும். பக்​தர்​கள் எளி​தில் மலைக் கோயிலுக்​குச் செல்ல 1966, 1981 மற்​றும் 1982-ம் ஆண்​டு​களில் மொத்​தம் 3 மின் இழுவை ரயில் (வின்ச்) சேவை தொடங்​கப்​பட்​டது. இவற்​றின் மூலம் மணிக்கு 400 பேர் வரை செல்​லலாம்.

நிறுத்தப்பட்ட திட்டம்: அதே​போல, 2004-ல் தொடங்​கப்​பட்ட ரோப் கார் (கம்பி வட ஊர்​தி) மூலம் மணிக்கு 240 பேர் சென்று வரலாம். 2019-ல் அதிநவீன தொழில்​நுட்​பத்​துடன் ஒரு மணி நேரத்​துக்கு 1,200 பக்​தர்​கள் செல்​லும் வகை​யில் 2-வது ரோப் கார் அமைக்​கும் பணி தொடங்​கப்​பட்​டது. பின்​னர்,கரோனா உள்​ளிட்ட காரணங்​களால் அந்த திட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், மலைக் கோயிலுக்கு பக்​தர்​கள் எளி​தில் செல்​லும் வகை​யில் ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் (Funicular winch- மின் இழுவை ரயில்) அமைக்​கத் திட்​ட​மிடப்​பட்​டது. மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டம் சப்​தஸ்​வரங்கி தேவி கோயிலுக்​குச் செல்ல அமைக்​கப்​பட்​டுள்ள ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் போன்​று, பழநி​யில் ரோப் கார் அரு​கிலேயே இதை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

90 விநாடிகளில் 80 பேர்: இந்த வின்ச் ரயி​லில் அடி​வாரத்​தில் இருந்து 90 விநாடிகளில் 80 பக்​தர்​கள் மலைக் கோயிலுக்​குச் செல்​லலாம். இகுறித்து ஆய்வு செய்த ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமில் உள்ள ரயில் இந்​தியா தொழில்​நுட்ப மற்​றும் பொருளா​தார சேவை​கள் நிறு​வனம், இந்த திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளது.

மலைகளுக்கு இடையே... பழநி சிவகிரிப்​பட்​டி​யில் கொடைக்​கானல் சாலை​யில் இடும்​பன் மலை உள்​ளது. மலை அடி​வாரத்​தில் இருந்து இடும்​பன் கோயிலுக்கு 540 படிகள் ஏறிச் செல்ல வேண்​டும். எனவே, பழநி மலைக்​கும், இடும்​பன் மலைக்​குமிடையே ரோப் கார் அமைக்​கு​மாறு பக்​தர்​கள் வலி​யுறுத்தி வந்​தனர்.

2023-ல் அறநிலை​யத் துறை மானியக் கோரிக்​கை​யின்​போது, ரூ.32 கோடி​யில் பழநி-இடும்​பன் மலைகளுக்​கிடையே ரோப் கார் அமைக்​கப்​படும் என அமைச்​சர் சேகர்​பாபு அறி​வித்​தார். இதையடுத்​து, சில மாதங்​களாக ஆய்வு நடத்​திய நிபுணர்​கள், புதிய ரோப் கார் அமைப்​ப​தற்​கான சாத்​தி​யக் கூறுகள் இருப்​ப​தாக தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, ரூ.67 கோடி​யில் ஃபனிகுலர் வின்ச் ரயில், ரூ.87 கோடி​யில் ரோப் கார் அமைக்​கும் திட்​டம் என மொத்​தம் ரூ.154 கோடி​யில் இவ்​விரு திட்​டங்​களை​யும் செயல்​படுத்த தமிழக அரசு அனு​மதி அளித்​துள்​ளது. விரை​வில் திட்​டப் பணி​கள் தொடங்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>பழநி மலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஃபனிகுலர் வின்ச் ரயிலின் மாதிரி.</p></div>
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in