சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை அசோக் நகரில் தலைமையகம்
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
Updated on
2 min read

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்​க​னை​கள் தேர்வு செய்​யப்பட உள்​ளனர். இது தொடர்​பான அறி​விப்புவிரை​வில் வெளி​யாக உள்​ளது.

தமிழகத்​தில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், பெண்​களின் பாது​காப்பை வலுப்​படுத்​த​வும், அவசர காலங்​களில் துரித​மாக களமிறங்கி நடவடிக்கை எடுக்​க​வும், பெண்​கள் மட்​டுமே இடம்​பெறும் ‘சிங்​கப்​பெண்’ சிறப்பு அதிரடிப் படை கடந்த ஜூன் மாதம் தொடங்​கப்​பட்​டது. இந்த படை தற்​போது சென்னை டிஜிபி அலு​வலக வளாகத்​தில் தற்​காலிக​மாக செயல்​படு​கிறது.

இந்​நிலை​யில், டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் உத்​தர​வுப்​படி,சென்னை அசோக் நகரில் உள்ளகாவல் பயிற்​சிக் கல்​லூரி வளாகத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை​யின் நிரந்தர தலை​மையகத்தை அமைக்க ஐ.ஜி. பவானீஸ்​வரி நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளார். இதையொட்​டி, அலு​வலக கட்​டமைப்​பு, கட்​டுப்​பாட்டு அறை, தகவல் தொடர்பு மையம் உள்​ளிட்ட பணிகள் நடந்து வரு​கின்​றன.

அசோக் நகரில் உள்ள காவல் பயிற்​சிக் கல்​லூரி வளாகம் ஏற்​கெனவே தமிழக காவல் துறை​யின் முக்​கிய புல​னாய்வு மற்​றும் சிறப்புப் பிரிவு​களின் மைய​மாக விளங்கி வரு​கிறது. மாநில சைபர் க்ரைம், பொருளா​தார குற்​றப்​பிரிவு, சிலை கடத்​தல் தடுப்​பு, பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு என பல்​வேறு முக்​கிய பிரிவு​கள் இங்கு இயங்கி வரு​கின்​றன.

அதே வளாகத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை தலை​மையக​மும் அமைக்​கப்​படு​வ​தால், ஒருங்​கிணைந்த காவல் நிர்​வாகம், விரை​வான தகவல் பரி​மாற்றம் மற்​றும் அவசர நடவடிக்​கைகளை மேலும் திறம்பட மேற்​கொள்ள முடி​யும் என்று அதி​காரி​கள் நம்​பிக்கை தெரி​வித்​தனர்.

சிங்​கப்​பெண் அதிரடிப் படையை தொழில்​நுட்ப ரீதி​யாக வலுப்​படுத்​தும் வகை​யில், அதிநவீன ட்ரோன்​கள், கண்​காணிப்பு உபகரணங்​கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்​களை வாங்​கும் நடவடிக்​கை​யும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கூட்ட நெரிசல் பகு​தி​கள், முக்​கிய விழாக்​கள், பெண்​கள் பாது​காப்பு பணி​கள் மற்​றும் அவசர மீட்பு நடவடிக்​கை​களில் இந்த ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

துடிப்​புமிக்க 2,500 பெண் காவலர்​களை இந்த படைக்கு புதி​தாக தேர்வு செய்​யும் வகை​யில், விதி​முறை​களை இறுதி செய்​யும் பணி​யும் நடந்து வரு​கிறது. வயது வரம்​பு, உடல் தகு​தி, கல்​வித் தகு​தி, தொழில்​நுட்ப அறி​வு, மன உறு​தி, சிறப்பு பயிற்​சிக்​கான திறன் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​களின் அடிப்​படை​யில் எழுத்து மற்​றும் உடல் தகுதிதேர்வு நடை​முறை வகுக்​கப்​பட்டுவரு​கிறது. இது தொடர்​பான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்பட உள்​ள​தாக டிஜிபி தெரி​வித்​துள்​ளார்.

குழந்தை திரு​மணம் தடுப்பு: பெண்​களின் பாது​காப்பை வலுப்​படுத்​து​வது மட்​டுமின்​றி,குழந்தை திரு​மணத்​தை​யும் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை​யினர் தடுத்து வரு​கின்​றனர். கடந்த 2 மாதங்​களில் மட்​டும் 10-க்​கும் மேற்​பட்ட குழந்தை திரு​மணங்​கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டுள்​ளன. இதுத​விர, பாதி​யில் படிப்பை நிறுத்​திய குழந்​தைகளின் பெற்​றோரிடம் பேசி 75-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகளை மீண்​டும் பள்​ளிக்கு அனுப்​பி​யுள்​ளனர்.

புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் மத்​தி​யிலும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளை நடத்​தி​யுள்​ளனர். பள்​ளி, கல்​லூரி​களுக்​குச் சென்று பாலியல் அத்​து​மீறல் தொடர்​பாக விழிப்​புணர்வு மேற்​கொள்​வதோடு, புகார்​களைப் பெற்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்​கும் பணி​களை​யும்​ சிங்​கப்​பெண்​ அதிரடிப்​ படை​யினர்​ தீவிர​மாக மேற்​கொண்டு வருகின்​றனர்​.

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in