தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்: 100% இலக்கை எட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்: 100% இலக்கை எட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தனி​யார் மருத்​து​வ​மனை​களில் குழந்​தைகளுக்கு இலவச தடுப்​பூசி திட்​டத்தை விரிவுபடுத்த சுகா​தா​ரத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது.

தமிழகத்​தில் தேசிய தடுப்​பூசி அட்​ட​வணை​யின் கீழ் மொத்​தம் 11 வகை​யான தடுப்​பூசிகள் குழந்​தைகளுக்கு வழங்​கப்​படு​கின்​றன. அதன்​படி, காசநோய், கல்​லீரல் தொற்று மற்​றும் புற்​று​நோய், இளம்பிள்ளை வாதம், கக்​கு​வான் இரு​மல்,ரண ஜன்​னி, தொண்டை அடைப்​பான், இன்ஃப்​ளூயன்சா தொற்​று,நிமோனி​யா, வயிற்​றுப்​போக்​கு, தட்​டம்மை மற்​றும் ரூபெல்லா நோய், ஜப்​பானிய மூளைக்​காய்ச்​சல், வைட்​ட​மின் ஏ குறை​பாடு உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்​காக தடுப்​பூசிகள் போடப்​படு​கின்​றன.

இந்த திட்​டத்​தின் கீழ் ஆண்​டு​தோறும் 9.40 லட்​சம் குழந்​தைகளுக்கு தடுப்​பூசிகள் வழங்​கப்​படு​கின்​றன. அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், வட்​டார மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் உட்பட 11 ஆயிரம் இடங்​களில் அந்த தடுப்​பூசிகள் அளிக்​கப்​படு​கின்​றன. முதல் தவணை தடுப்​பூசிக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்​தைகளுக்கு உரிய நேரத்​தில் பெற்​றோர் செலுத்​து​வ​தில்​லை. இதனால் 100 சதவீத தடுப்​பூசி இலக்கு அனைத்து இடங்​களி​லும் எட்​டப்​படு​வ​தில்​லை.

எந்த சுகா​தார மாவட்​டம் தடுப்​பூசி செயல்​பாட்​டில் பின்​தங்​கி​யுள்​ளது என்​பதை கண்​டறிந்​து, அதனை சரிசெய்​வதற்​கான நடவடிக்​கைகளை சுகா​தா​ரத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. அதே​நேரம் தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் இலவச தடுப்​பூசி செயல் திட்​டத்தை மேம்​படுத்த தீவிர நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இது தொடர்​பாக பொது சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “தமிழகத்​தில் தேசிய தடுப்​பூசி அட்​ட​வணை​யின் கீழ் வழங்​கப்​படும் அனைத்து தடுப்​பூசிகளும் போதிய எண்​ணிக்​கை​யில் பாது​காப்​பாக இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளன. தடுப்​பூசி தவணை​கள் தவற​விடப்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்ய தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் இலவச​மாக 11 தடுப்​பூசிகளை வழங்​கும் திட்​டம் நடை​முறை​யில் உள்​ளது.

இந்த திட்​டத்​தின் கீழ் இணைந்து செயல்பட விரும்​பும் தனி​யார் மருத்​து​வ​மனை​கள், அதுகுறித்து பொது சுகா​தா​ரத் துறைக்கு விண்​ணப்​பிக்​கலாம். சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வ​மனை​களுக்கு சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் சென்று கட்​டமைப்பு வசதி​களை ஆய்வு செய்​வார்​கள். அதில் திருப்தி ஏற்​படும்​பட்​சத்​தில் இலவச தடுப்​பூசி திட்​டத்தை சம்​பந்​தப்​பட்ட தனி​யார் மருத்​து​வ​மனை​களில் செயல்​படுத்த அனு​மதி வழங்​கப்​படும். தடுப்​பூசி மருந்​துகளும் அரசு சார்​பில் வழங்​கப்​படும். தடுப்​பூசிகள் முறை​யாக பயன்​படுத்​தப்​பட்​டதற்​கான ஆவணங்​களை அரசுக்கு தனி​யார் மருத்​து​வ​மனை​கள் அளிக்க வேண்​டும். அதன் அடிப்​படை​யில் தொடர்ந்து தடுப்​பூசிகள் அவர்​களுக்​கு அனுப்​பி வைக்கப்படும்'' என்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்: 100% இலக்கை எட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in