

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச்செயலாளராக சி.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அமைப்புச்செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராக இசக்கி சுப்பையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், துணை பொதுச்செயலாளர்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ராஜகோபால், எச்.ஜாகீர் உசேன், வி.குமார், எஸ்.யுவராஜ், சி.வி.தினகரன், கே.மணிகண்டன், ஆர்.எஸ்.மணிகண்டன், கே.அருள்ராஜ், எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.