அவகாசம் முடிவடைந்த பிறகும் உரிமம் பெறாத செல்லப் பிராணிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: ஆய்வு நடத்த மாநகராட்சி திட்டம்

செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறு​வதற்​கான அவகாசம் நேற்​றுடன் நிறைவடைந்​தது. இதையடுத்​து, வீடு வீடாக ஆய்வு நடத்​தி, உரிமம் பெறாத செல்​லப் பிராணி​களின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநக​ராட்சி திட்​ட​மிட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​போர், அதை பதிவு செய்துஉரிமம் பெற வேண்​டும் என அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து மாநக​ராட்சி சார்​பில், திரு​விக நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய இடங்​களில் உள்ள செல்​லப்​பி​ராணி சிகிச்சைமையங்​கள், சோழிங்​கநல்​லூரில் உள்ள நாய் இனக்​கட்​டுப்​பாட்டு மையம் ஆகிய இடங்​களில் கடந்த அக்​.8-ம் தேதி முதல் செல்​லப் பிராணி​களுக்கு வெறிநோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

அத்​துடன், செல்​லப் பிராணி​களுக்கு மைக்​ரோசிப் பொருத்​துதல், உரிமம் வழங்​குதல் ஆகிய பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. உரிமம் வழங்​கு​வதற்​கான காலக்​கெடு டிச.14 வரை நீட்​டிக்​கபட்​டது. அந்த அவகாசம் நேற்​றுடன் நிறைவடைந்​தது.

இது​வரை 1,05,556 செல்​லப்​ பி​ராணி​களின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு 57,626 பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 3 நாட்​களாக 8 இடங்​களில் சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​பட்​டன. நேற்று ஒரே நாளில் 2,930 செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

அவகாசம் முடிந்த நிலை​யில், இன்றுமுதல் வீடு வீடாக ஆய்வு நடத்த மாநக​ராட்சி திட்​ட​மிட்​டுள்​ளது. உரிமம் இன்றி செல்​லப்​பி​ராணி​களை வைத்​திருந்​தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில், ஏற்​கெனவே மாநக​ராட்சி மன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, உரிமம் பெறாமல் செல்​லப் பிராணி​களை வைத்​திருப்​போருக்கு அபராதம் வி​திக்க இருப்​ப​தாக மாநக​ராட்​சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்</p></div>
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in